Monday, May 26, 2008

கிழக்கு மாகாண தேர்தல் குறித்து முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கவேண்டிய அவதானங்களும், நிலைப்பாடுகளும். 23rd March 2008

கிழக்கு மாகாண தேர்தல் குறித்து முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கவேண்டிய அவதானங்களும், நிலைப்பாடுகளும்.

தேர்தலின் உள்நோக்கம்:

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அடிப்படையான தீர்வுகள் எதுவும் எட்டப்படாத சூழலில் கிழக்கு மாகாண மக்களுக்கு ஜனநாயக, இயல்பு வாழ்வைப்பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அல்ல, மேற்படி தேர்தலைநோக்கி அரசு துரிதகதியில் செயற்படுகின்றது. மாற்றமாக 1963முதல் ஈழப்போராட்டம் அல்லது தமிழ் தாயகப்போராட்டத்தின் மிகவுமே அடிப்படையான கோரிக்கைகளுள் ஒன்றாக வடகிழக்கு இணைப்பு அமைந்து வருகின்றது, 2005ல் பதவிக்கு வந்த மகிந்த தலைமையிலான அரசு புலிகளைப் பலவீனப்படுத்துவதே இனப்பிரச்சினைக்கான தீர்வாக கருதி செயற்பட்டுவருகின்றது (அதன் நியாயங்களையும் சாத்தியப்பாடுகளையும் ஆராய்வதைத் தவிர்க்கின்றேன்) அதன் ஒரு கட்டமே நடந்து முடிந்த உள்ளூராட்சித்தேர்தல்களும், நடக்கவுள்ள மாகாணசபைத் தேர்தல்களுமாகும்.

இனப்பிரச்சினைத்தீர்வு முயற்சிகளில் நோர்வே ஓரங்கட்டப்பட்டதும்; இந்தியா திரைமறைவில் பங்கேற்றிருப்பதும் இங்கு அவதானிக்கத்தக்கது. 1987ல் இடம்பெற்ற 13வது திருத்தச்சச்சட்த்தினைத்தொடர்ந்து 1988 நவம்பர் 19ம் நாள் இந்திய அமைதிகாக்கும் படையின் உதவியுடன் நடாத்தப்பட்ட வடகிழக்கு மாகாணத்தேர்தலின் பின்னர் நடக்கவுள்ள தேர்தல் இதுவாகும், இத்தேர்தலுக்கும் இந்திய நலன்களுக்கும் அதிக தொடர்பு இருப்பது வெளிப்படையாகவே தெரிகின்றது, P.சந்திரசேகரன் மற்றும் இராதாகிருஷ்னன் ஆகியோரது செயற்பாடுகளையும் இங்கு காணக்கூடியாதக இருப்பதும் இதன் பின்னணியிலேயாகும், அனைத்துக்கட்சிக்குழு, 13வது திருத்தச்சட்டத்தின் பிரகாரமே இனப்பிரச்சினைக்காணதீர்வு அமைய வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது, அதுவே இந்தியாவினதும் விருப்பம், வடகிழக்கு இணைவை இந்தியா விரும்பவில்லை, அத்துடன் புலிகளின் தற்போதய ஆயுதப்போராட்ட வளர்ச்சியும் அது தமிழகத்தில் தோற்றுவிக்கும் அலைகளும் இந்தியாவை உசார்படுத்தியுள்ளது. இதுவே இந்தியாவின் கரிசனைக்கு காரணமாகும்.

எனவே தமிழ் ஈழப்போராட்டத்தில் அதிகம் ஈடுபாடுள்ள, ஈழப்போராட்டம் குறித்த அடிப்படையான கருத்துக்களைக்கொண்டுள்ள பழைய தமிழ் அரசியல் இயக்கங்களைவிடவும் அரசியல் முதிர்ச்சியில்லாத வெளிஉலகுடன் அதிகம் தொடர்பில்லாத TMVP தற்போது அரசுக்கு கிடைத்துள்ள சிறப்பான துருப்பு எனவே எப்படியாவது மாகாணசபைத்தேர்தலை நடாத்தி TMVP யை ஆட்சியில் அமர்த்துவதுவே அரசின் திட்டம். இதனூடாக

Ø வடகிழக்கு பிரிப்பை உறுதிசெய்தல், சட்டமயமாக்குதல்

Ø புலிகளை பயங்கரவாத இயக்கமாக அடையாளப்படுத்துதல்

Ø மகிந்தவின் செய்ற்பாடுகளுக்கு சர்வதேச அங்கீகாரமொன்றை பெற்றுக்கொடுத்தல்

Ø பலவீனமான தமிழ் குழுவொன்றிடம் ஆட்சியை வழங்குவதனூடாக தமக்குத்தேவையான நிக்ழ்ச்சி நிரழொன்றினை நடைமுறைப்படுத்த முடியுமாக இருத்தல்.

மேற்படி அடைவுகளுக்கான நிகழ்ச்சி நிரழ் (இந்திய, இலங்கை அரசுகள் மற்றும் TMVP, JVP, Muslim Ministers and (UPFA) Alliance Parties) ஆகியவற்றின் முழுமையான பிரசன்னத்துடன் அல்லது எதிர்ப்பில்லாதா சூழலில் அல்லது எதிர்க்க முடியாத சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

முஸ்லிம்களின் நிலை

அரசு முஸ்லிம் தரப்பை அதன் வழமையான ஆசைவார்த்தைகளுடன் தேர்தல் உடன்படிக்கையொன்றுக்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது, முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்குத்தருவதற்கு பேரம்பேசவும் தாம் தயார் என்று அரசு தரப்பு தெரிவிக்கின்றது (தேர்தல் பிரச்சாரத்தின் போது அல்லது முதலைமைச்சாரானதன் பின்பு அவர்களை குண்டுவைத்துக்கொன்றுவிட்டு தமக்கு வேண்டியவரை முதலமைச்சாராகுவது ஒன்றும் இயலாத காரியமில்லை)

பிள்ளையான் என்னும் ஒரு பிழையான தெரிவின் பின்னால் முஸ்லிம்கள் தமது வாழ்வை அடகுவைக்க முடியாது எனவே அரசுடன் இணைதல் என்பது விவாதமின்றியே முடிவிற்கு வருகின்றது.

எதிர்கட்சியுடன் (UNP) இணைவதும் மிகவும் வேடிக்கையானது, குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போன்ற ஒரு செயலையே UNP மேற்கொள்கின்றது, SLMC மற்றும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிரான ஒரு முக்கோண போட்டியையே UNP எதிர்பார்க்கின்றது, த.தே.கூ வுடனும் புலிகளுடனும் UNP ற்கு என்ன உடன்பாடுகள் உள்ளன என்பது வெளிப்படையாக அறியப்படாத விடயங்கள்.

இத்தகைய மோசமான சூழ்நிலை இருக்கும் நிலையில் முஸ்லிம்தரப்பு : தமிழ்ர்தரப்புக்குறித்து பூச்சிய நிலைப்பாட்டுடன் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை மட்டும் கருத்தில் கொண்டு தேர்தலில் தனித்துப்போட்டியிட்டு முஸ்லிம்களின் வாக்குப்பலத்தை நிரூபிப்பதுவும், தேர்தல் முடிவுகளின் பின்னர் தாம் எந்தத்தரப்புடன் இணைவது என்று தீர்மானிக்கும் போக்கே இங்கு மிகவும் பொறுத்தமானதாகும்

இதில் உள்ள சாதகங்கள் :

Ø முஸ்லிம்களின் வாக்குப்பலம் சிதைவதத்தடுக்க முடியும்

Ø முஸ்லிம்களின் சரியான பலத்தைக்காட்டமுடியும் (சில போது ஆட்சியமைக்கும் பெரும்பான்மை எமக்கு கிடைக்கவும் முடியும்)

Ø தேர்தல் காலத்தில் அனைத்து தரப்புகளுடனும் நல்லுறவைப்பேண முடியும்

Ø இதனால் தேர்தல் அசம்பாவிதங்களை க்குறைக்கமுடியும் எம்மைப்பகைத்துக்கொள்தல் தமக்கு கேடு என்று எதிரிக்குப்புரிய வைத்தல்

No comments: