Thursday, December 27, 2007

இஸ்லாமிய அரசியல் சிந்தனைத்தளத்தில்; ஜனநாயகம் (ஆங்கில மூலம் கலாநிதி அஸாம்.எஸ்.தமீமி - தமிழில் அ.அஸ்மின்

பகுதி 01:

கடந்த இரு நூற்றாண்டு காலத்தில் இஸ்லாமிய அரசியல் தளத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், ஜனாநாயக சிந்தனையின் தாக்கம் செலுத்தியிருக்கின்றது. அத்துடன் கடந்த இரு நூற்றாண்டு காலத்தின் அரபு ஆரசியல் சிந்தனையாளர்களான Rifa'a Tahtawi (1801-73), Khairuddin at-Tunis (1810-99), Jamal ad-Din al-Afghani (1838-97), Muhammad Abduh (1849-1905), Abdurrahman al-Kawakibi (1849-1903), Rashid Rida (1865-1935), Hasan al-Banna (1904-49), Ali Abd Ar-Raziq (1888-1966), Sayyid Qutb (1906-66), Sa'id Hawwa, and Malik Bennabi (1905-73).அகியோரது கருத்துக்களிலும், செய்யத் குத்ப் உடைய அரசியல் கருத்துக்களில் மௌலானா மௌதூதி ( 1903- 79) தாக்கம் குறித்தும் ராஷித் கண்ணூஸியுடைய கருத்துகளில் மாலிக் இப்னு நபியுடைய சிந்தனைத்தாக்கம் குறித்தும் எமது சமகால இஸ்லாமிய அமைப்புகளில் ஜனநாயாத்தின் தாக்கம் குறித்தும் கருத்துக்களை பதிவது இவ்வாய்வின் நோக்கமாகும்.

நவீன அரபு தேசியவாத எழுச்சியுடன் ஜனநாயகமும் அரபு அரசியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்ததொடங்கிவிட்டது.ஜனநாயகம் பற்றிய எண்ணக்கருவானது பலதரப்பட்ட அரசியல் சமூக மேம்பாடுகளைத்தொடர்ந்து அரபு உலகில் வளர்ச்சிகாணத்தொடங்கியது.அரபு அறிவியல் உலகில் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடலகளை நோக்கும் பொழுது

Rifa'a Tahtawi (எகிப்திய ஜனநாயகத்தின் தந்தை) எழுதிய Takhlis Al-Ibriz Ila Talkhis Bariz,(1834) என்னும் நூலில் அவர் குறிப்பிட்டுள்ள பிரெஞ்சுப்புரட்சி மற்றும் பிரெஞ்சின் ஆட்சி முரைகள் குறித்த கருத்துக்களில் இருந்தும், அவர் ஜனநாயகத்தை இஸ்லாமிய அரசியல் முறைமைகளுடன் ஓப்பிட்டு இஸ்லாத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக காட்டமுனைவதிலிருந்தும் கண்டு கொள்ள முடியுமாக உள்ளது. அத்துடன் மத சுதந்திரம் என்பது மதநமிபிக்கையின் பால் உள்ள சுதந்திரம்தான், எனவே இஸ்லாம் இதனை அங்கீகரிக்கின்றது, இதனைப்போலவே அரசியலிலும் மாற்றுக்கருத்து உள்ளதனமையும் மார்க்கத்துடன் முரண்பாடு உடைய விடயம் இல்லை என அவர் தனது கருத்துக்களை முன்வைக்கின்றார்.

இத்தொடரில் மிக முக்கியமான ஒரு அம்சமாக Khairuddin At-Tunisi அவர்களுடைய Aqwam Al-Masalik Fi Taqwim Al- Mamalik (The Straight Path to Reforming Governments) நூல் அமைகின்றது. அதில் அவர் அப்போதைய அரசியல் முறைமையினை எவ்வாறு சீராக்கம் செய்தல் என்ற கருத்தில் அவர் சொன்ன இரு கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன: அப்போதய சிந்தனையாளர்களை நோக்கி, மக்களின் அந்தஸ்த்தினை உயர்த்துவதைவிடவும் அவர்களை பண்பட்டவர்களாக கலாசாரமுடையவர்களாக நாகரீகம் உடையவர்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துக்கள், அதேபோன்று மக்களே எனைய தேசங்களிடமிருந்து முன்மாதிரிமிக்க சிந்தனைகளையும் நடத்தைகளையும் உதாசீனம் செய்வதை விட்டும் விலகி அவற்றின் நல்ல தன்மைகளை உங்களிடமும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள், அவை முஸ்லிமல்லாத நாடுகளாயிருப்பினும் அங்குள்ள கண்டுபிடிப்புகள் முற்போக்கான அம்சங்களை புரந்தள்ளிவிடவேண்டாம். எனவே இவ்வாறு அவர் குறிப்பிடுவது அரசியல் ஒழுங்குகளையும் சேர்த்துத்தான் அமைகின்றது.

அனால தியுனிஸியாவின் Ghannouchi மாறுபட்ட கருத்தைக்கொண்டிருந்தார் அவர் Khairuddin அக இருக்கட்டும் அல்லது ஏனைய சமகால இஸ்லாமிய அறிஞர்களாக இருக்கட்டும் அவர்கள் இஸ்லாத்தின் மீது சந்தேகம் கொண்ட்வர்களாக அல்லது மாற்றமொன்றை அறிமுகப்படுத்துபவர்களாகவே இருந்தார்கள் என்கின்றார், அத்துடன் அவர்கள் முயற்சிப்பதெல்லாம் சமகால, பண்டைய அறிஞர்களின் கருத்துக்களுக்கு இசைவாக இஸ்லாமிய முறைமைகளில் மாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்குத்தான், அத்துடன் மேற்கின் இரவல் அரசியல் முறைமைகளை சட்டபூர்வமாக்குவதற்குத்தான் அவர்கள் முயற்சிக்கின்றார்கள்:

ஆனால் தீட்சன்யம் மிக்க அறிவு முஸ்லிமுடைய தூரநோக்குடன் மிகவும் பின்னிப்பிணைந்தது:வஹியுடைய வரவானது படைப்பாளனது படைப்புகளுக்கான பூரணத்துவமிக்க வழிகாட்டலாகவே அமைகின்றது, அதில் எல்லாமே அடங்கப்பெற்றுள்ளது. என்றகருத்தின் அடிப்படையில்
Khairuddin தனது திட்டங்களை அமுல்நடாத்தும் ஒரு கட்டமாக (As-Sadiqiyah School for teaching modern arts and sciences within an Islamic framework) என்ற ஒரு கலைக்கூடத்தை நிறுவினார், அதில் எமது அடிப்படை மூலாதாரங்களின் மூலமும், அவற்றை திறம்பட கற்றுக்கொள்வதனூடாகவும் எமக்கான மிகவும் வினைத்திறன் மிக்க நிர்வாக கட்டமைப்புகளையும், சிந்தனைகலையும் உருவாக்க முடியும் ,அதனூடாக சமகாலத்தில் நிலவும் சர்வாதிகார ஆட்சி முறைமையினை மாற்றியமைத்து, மேற்கிலிருந்து மேற்கொள்ளப்படும் அரசியல் பிரதீயீட்டும் தன்மையினையும் கட்டுப்படுத்த முடியும் என Khairuddin நம்பினார்.

Jamal ad-Din al-Afghani (1838-97)

ஜமாலுத்தீன் ஆப்கானி சமகால அரசியல் குளறுபடிகளுக்கு காரணமாக'adl (justice) and shura (council) நீதம் மற்றும் சூரா முறைமையில் தோன்றிய குறைபாடுகளே காரணம் என்கின்றார். மக்கள் தேர்ட்தல்கள் மூலம் 'adl (justice) and shura (council) அகியவற்றை நிறுவும் முயற்சிகளில் அதிகம் ஆர்வமும் உரிமையும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கருதுகின்றார்

இவரது கருத்துக்கள் எழுச்சி மிக்கனவாக அமைந்துள்ளது; மக்கள் தேர்தல் மூலமும், சூறா உருப்புரிமை மூலமும் அரசியலில் நேரடியாக பங்குபற்ற வேண்டும், என்ற கருத்தை இவர் கொண்டுள்ளார்:('The Despotic Government', published in Misr on 14 February 1879,) எதேச்சாதிகாரமான அராசாங்கம் என்ற தலைப்பில் மிஸ்ர் நாளிதழில் ஆப்கானி எழுதிய கருத்துக்கள் பின்வருமாறு அமைந்துள்ளன " எதேச்சாதிகாரமான அரசாங்கமே மக்கள், மக்களாட்சி தொடர்பில் கருத்துக்களைப்பெற்றுக்கொள்ளாமலிருக்கும்படி செய்கின்றது, மக்களாட்சியே உண்மையான மகிழ்ச்சி அமைதி நீதி என்பவற்றின் வடிவமாகும். மக்கள் தமது நடத்தைகள் குறித்தும் கொடுக்கல்வாங்கல், வியாபாரம், இதர நடத்தைகள் தொடர்பிலும் அக்கரையுடன் கூடிய முற்போக்கான அரச முறைமையே மக்கள் ஆட்சி என அடையாளப்படுகின்றது. உண்மையாக மக்கள்: மக்களால் நடத்தப்படும் ஆட்சியிலேயே மக்களாக மதிக்கப்படுவர், எதேச்சாதிகார ஆட்சியில் மக்கள் மிருகங்களுக்கு ஒப்பானவர்களே. மக்களாட்சி எதேச்சதிகார ஆட்சியின் எதிர்வடிவம், எதேச்சாதிகாரம் களையப்படுவதே மக்களாட்சி சிறப்பாக ஆட்சி செய்வதன் முதல் படி, என்று தனது அரசியல் சார்ந்த கருத்தை அவர் முன்வைக்கின்றார், அத்துடன் மக்களாட்சி என இவர் இங்கு குறிப்பிடுவது தாராண்மைத்தன்மை நிரைந்த அமைப்பை அல்ல, மாற்றமாக மிகவும் கட்டுக்கோப்பான அரசியல் முறைமையை ஆகும்.


Muhammad Abduh (1849-1905)


முஹம்மது அப்துஹு, 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வாழ்ந்த இஸ்லாமிய சமுக அறிஞர், அவர் அரசியல் குறித்து கருத்து வெளியிடும் போது, இஸ்லாமிய அரசியல் சிந்தனைகளுக்கும் மேற்கத்தேய அர்சியல் சிந்தனித்தளத்திற்கும் நிறையவே வேறுபாடுகளும் தூரமும் நிலவுகின்றது அவை இரண்டும் குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும், அவற்றிற்கிடையேயான உடன்பாடுகள்,முரண்பாடுகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டும்.அதன்படி நோக்கின் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்டையாகிய : நலன் (maslaha -interest)என்பதும் பயன்பாடு ( manfa'a - utility) என்பதும் மேற்கத்தேய அரசியலிலும் அதே அர்த்தத்தில் கையாளப்பட்டிருப்பதை அவர் காண்கின்றார். ஜனநாயக சூழலில் சூரா (shura) இஸ்லாமிய அரசியல் களத்தில் இஜ்மா (ijma' with consensus) ஆகிய இரண்டும் ஒன்றே என்ற கருத்தை முஹம்மது அப்துஹு கொண்டுள்ளார்.

இறையாட்சி என்பதில் முஹம்மது அப்துஹு உடன்பாடானக்ருத்தை கொண்டிருக்கவில்லை மாற்றமாக ஹாகிம்(governor), காழி (judge), முப்தி என்பவர்கள் மனிதர்களாகவே இருந்துள்ளனர் என்றகருத்தையும் கொண்டுள்ளார். சமகால நவீன மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கவேண்டுமாயின், இஜ்திஹாத் மீண்டும் முடுக்கிவிடப்படவேண்டும், அத்துடன் இதுவரை பின்பற்றப்பட்ட பிற்போக்குத்தனம் களையப்படவேண்டும், பாராளுமன்ற அரசியல் முறையினை இவர் சிபாரிசு செய்கின்றார், பன்மைத்துவத்தை ஆதரிக்கும் இவர், சமூகத்தின் ஒற்றுமையும் ஐக்கியமும் மேம்பட வேண்டுமாயின் இத்தகைய அரசியல் மாற்றம் தேவையானதுவே என்ற கருத்தை இவர் கொண்டுள்ளார்.

Abdurrahman Al-Kawakibi (1849-1903) அப்துர்ரஹ்மான் அல் கவாகிபி Taba'i' Al- Istibdad (The Characteristics of Tyranny) - ஆட்சியாளனின் குணாம்சங்கள், மற்றும் Umm Al-Qura (The Mother of Villages), தாய்த்தேசம் ஆகிய இரண்டு நூல்களிலும் அரசியல் சார்ந்த தனது கருத்துக்களை முன்வைக்கின்றார், மேற்படி நூலில் எதேச்சாதிகார அரசு குறித்தும் அதன் பல்வேறு தோற்றப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசியலுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்பானது இஸ்லாத்திற்கும் எதேச்சாதிகாரத்திற்கும் இடையேயான தொடர்பாக அடையாளம் செய்யப்படுள்ளது, இது முற்றிலும் தவறான கருத்தாகும் ,"எப்பொழுது ஒரு சமுதாயம் அத்ன்மீது விதிக்கப்பட்டுள்ள சமூகக்கடமையிலிருந்தும் நழுவி விடுமே அப்போது அந்த சமூகம் தண்டிக்கபடும் என்ற இஸ்லாத்தின் அரசு சார் கருத்தை இவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Muhammad Rashid Rida (1865-1935)

இஸ்லாமிய அரசியல் களத்தில் அடுத்து முக்கியத்துவம் பெரும் ஒருவராக ரஷித் ரிழா அமைகின்றார், முஸ்லிம் சமூகத்தின் அறீவீனமே அரசியல் அநாதை நிலைக்கான காரணம் என வாதிடும் ரஷித் ரிழா அதுவே மோசமான அரசியல் சூழலுக்கும் காரணம் என்கின்றார், இஸ்லாம் இரண்டு விடயங்களை தன்வசம் கொண்டுள்ளது ஒன்று ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்தல், தேசத்தின் விடயத்தில் கலந்தாலோசனை செய்தல் என்பனவே அவ்விரண்டுமாகும், ஆனால் எதேச்சாதிகார ஆட்சியாளர்கள் இதனை மறந்ததுமில்லாமல் முன்னையதை ஏற்று பின்னையதை விட்டுவிடும்படி மக்களை ஏவினார்கள். இஸ்லாம் அரசியலுக்குத்தேவையான அடிப்படைகளை நிறுவியது மட்டுமல்லாமல் துணைவிடயங்களில் இஜ்திஹாத் என்னும் வழிமுறையினையும் அறிமுகம் செய்து தந்துள்ளது.ஆனால் அரசியல் தவிர்ந்த ஏனையவிடயங்களில் மேற்கொள்ளப்பட்ட இஜ்திஹாதின் அளவின் சிறு பகுதியேனும் அரசியல் விடய்த்தில் மேற்கொள்ளப்படவில்லை, இதுவே எமது அரசியல் குழறுபடிகளுக்கான் மூலக்காரணமாக அமைகின்றது.


பகுதி-02

19ம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் மேலைத்தேய சிந்தனைகளினால் கவரப்பட்டு எப்படியாவது இஸ்லாமிய அரசியல் ஒழுங்கினுள் மேலைத்தேய அரசியல் அமைப்பை புகுத்தி அதற்கு ஒரு இஸ்லாமிய வடிவத்தைக் கொடுத்துவிடவேண்டும் என்று முயற்சித்தனர்: அது வெற்றியளிக்கவில்லை, 15ம் நூற்றாண்டுகளில் உலகின் பெரிய சாம்ராஜ்யமாக இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதிகளில் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. உலக முஸ்லிம்களை இணைத்த ஒற்றுமையின் அடையாளமாக இருந்த கலீபா(தலைமைத்துவம்): 1924ல் ஏற்பட்ட உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியுடன், இல்லாமலாக்கப்பட்டது. இதுவே இஸ்லாமிய சாம்ரஜ்யத்தின் வீழ்ச்சியாகவும் கருதப்படுகின்றது.

இக்காலகட்டத்தில்தான் முஹம்மது அப்துஹு,ரஷீத் ரிழா ஆகியோர் "அல் மனார்" என்னும் அரசியல் மாத இதழொன்றின் மூலம் மக்களை வழிநாடாத்திகொண்டிருந்தனர், இவ்வாறான ஒரு சூழலில் அஹ்மத் பன்னா என்னும் இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் புதல்வனான இமாம் பன்னா அவர்கள் ஒரு திட்டமிட்ட அடிப்படையிலும் இஸ்லாமிய அடிப்படைகளின் அடிப்படையிலும் சமகால உலகின் முதலாவது இஸ்லாமிய இயக்கத்தை நிறுவினார்.இன்றும் இஸ்லாமிய உலகில் அறியப்படும் "இஃவானுல் முஸ்லிமூன்" என்னும் அமைப்பு இஸ்லாமிய அரசியல் இயக்கமாக நிறுவப்பட்டது.

அறியப்படும் "இஃவானுல் முஸ்லிமூன்" அமைப்பின் வளர்ச்சி மிககுறுகிய காலத்தில் மிகவேகமாக இடம்பெற்றது, பலாஸ்தீன ஆக்கிரமிப்புக்கெதிரான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும் அரபு உலகில் அறியப்படும் "இஃவானுல் முஸ்லிமூன்" இயக்க்கத்தின் தோற்றப்பாட்டிற்கும் நிறையவே தொடர்புகள் இருக்கின்றன. 1939 அளவில் இமாம் ஹஸனுல் பன்னாவின் தலைமையில் வெளியிடப்பட்ட ரஸாயில் rasa'il (messages or articles)என்ற இதழில் வெளியான Bayn al-Ams wa'l-Yawm (Between Yesterday and Today), ஆக்கம் அதிக தாக்கம் உள்ளதாகவும் இஸ்லாமிய அரசியல் ஒழுங்கின் அவசியம் குறித்ததாகவும், "இஃவானுல் முஸ்லிமூன்" இயக்கத்தின் பணி குறித்துப்பேசுவதாயும் இருந்தது. அதில் இமாம் பன்னா அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.




Tuesday, December 25, 2007

இஸ்லாமிய இயக்க அரசியலில் கவனிக்கப்படவேண்டிய சமகால சிந்தனைகள் (அ.அஸ்மின்)

இஸ்லாமிய அரசியலின் புதிய பணி

21ம் நூற்றாண்டு இஸ்லாத்திற்குறியது என்ற கருத்து எவ்வளவு நிஜமானது என்பதற்கு கட்டியம் கூறுவதுபோலவே குறித்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே (2001-9-11) அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் மேற்கொண்ட நயவஞ்சகத்தனமான தாக்குதல் நடத்தையும் அதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையில் அதன் நேசநாடுகளும் இஸ்லாமிய உலகிற்கு எதிராக மேற்கொண்ட வன்மப்பாய்ச்சலும், ஒஸாமா பின்லேடன் என்னும் இஸ்லாமிய உலகில் அதிகம் அறிமுகமில்லாத, இஸ்லாமிய சிந்தனைமிக்க அறிஞர்வரிசையில் இல்லாத ஒருவரை இஸ்லாத்தின் முதன்மை முகவரியாகக்காட்ட முற்பட்ட முய்ற்சிகளும்: இஸ்லாமிய இயக்கங்களுக்கும், இஸ்லாமியவாதிகளுக்கும் கிடைத்த மிகப்பாரிய வெற்றியும், வாய்ப்பும் என்றே கொள்ள வேண்டியுள்ளது, எனெனில் இஸ்லாத்தினது உண்மையான முகவரி அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சுட்டிக்காட்டிய தீவிரவாதமும், தீவிரவாதிகளுமல்ல.

இத்தகைய நயவஞ்சகமான தாக்குதலைத்தொடர்ந்து, உண்மையான இஸ்லாத்தையும் அதன் முகவரியையும் தேடும் முயற்சிகள் பலதரப்பினரிடமிருந்தும் முனைப்புடன் முடுக்கிவிடப்பட்டுள்ளன, இதுவே இஸ்லாத்திற்கும் இஸ்லாமியவாதிகளுக்கும் கிடைத்த மிகச்சரியான சந்தர்ப்பம், இஸ்லாத்தின் மிகச்சரியான அடையாளத்தையும் அதன் முகவரியையும் உலகிற்கு காட்டும் பொருப்பும் கடமையும் இஸ்லாமிய இயக்கங்களுக்க்கும், அறிஞர்களுக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது, அதற்கான முயற்சிகள் இப்போது பரவலாக மேற்கொள்ள்ப்படுகின்றன. இஸ்லாமியசிந்தனை உலகிற்கு எடுத்துச்சொல்லப்படுவதற்கான மிகச்சரியான தருணம் இதுவே.

"20ம் நூற்றாண்டில் கம்யூனிஸத்தின் செம்படை, ஆயுதப்பலத்தினால் தோற்கடிக்கப்படவில்லை, மேற்கு கையாண்ட அறிவியல், இராஜதந்திர முன்னெடுப்புகளே காரணமாகின: 21ம் நூற்றாண்டில் மிகஜாம்பாவானான தோற்றப்பாட்டுடன், அதி நவீன ஆயுததள்பாடங்களுடன் இஸ்லாமிய உலகுக்கு முன்னால் நிற்கின்ற அமெரிகாவும அதன் நேச நாடுகளும் ஆயுதத்தால் தோற்கடிக்கப்பட முடியும் என எதிர்பார்க்க முடியாது, மாற்றமாக சிந்தனைப்போராட்டமும் இராஜதந்திர யுத்தமுமே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றியைப்பெற்றுத்தரும், எனவே இத்தகய ஒரு பாரிய மாற்றத்திற்கு மிக அடிப்படையாக இஸ்லாமிய அரசியல் ஒழுங்கில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கியமான ஒரு மாற்றம் யாதெனில்; இஸ்லமிய அரசியலில் மேற்கொள்ளப்படவேண்டிய சிந்தனைப்புரட்சியாகும்,

அறபு தேசியவாதாமாயினும், குழுவாதங்களாயினும் இப்போது அவை எமக்கு உதவப்போவதில்லை, எமது சமூகத்தில் அரசியல் தீவிரவாத கருத்துக்களும் ஆயுதவிரும்பிகளும் இல்லை என்பதற்கில்லை எனவே முதற்கண் நாம் இதுகுறித்து கவனம் செலுத்தவேண்டும் எமது அரசியல் கருத்துப்பறிமாற்றங்கள் எம்மை வலுப்படுத்தும், எமக்கிடையிலும் பிறமதத்தவரிகளிடையேயும் இஸ்லாமிய அரசியல் குறித்த நல்ல பதிவுகளை அவை ஏற்படுத்தும்,
இக்கருத்தை மொரொகேவின் பின்ஸயீத், சிரியாவின் முஹம்மத் சஹாஹ்ரி, துருக்கியின் பத்ஹுல்லாஹ் குல், ஈரானின் மு.கதாமி இந்தோனேசியாவின் நூர் மாஜித் ஆகிய அறிஞர்களும் கொண்டுள்ளனர்.

Islamic Political Ethics: Civil Society, Pluralism, and Conflict
Edited by Sohail H. Hashmi With a foreword by Jack Miles

எனவே இலங்கையின் முஸ்லிம் அரசியலிலும் இத்தகைய ஒரு பரந்தசிந்தனைத்தளம் பின்னணியாக இருப்பது, அதன் தெளிவானதும் இஸ்லாமிய சிந்தனைசார்ந்த செயற்பாட்டிற்கும் உருதுணையாக அமையும். இனப்பிரச்சினை என்கின்ற புற்று நோயினாலும், யுத்தினால் வாழ்க்கை நடாத்தும் அரசியல் வாதிகளினாலும் அழிவை நோக்கிப்போகும் இலங்கை போன்ற ஒரு தேசம், இஸ்லாத்தின் சரியான வடிவத்தை தெரிந்துகொள்தல் என்பது பல வழிகளில் எமக்கு துணைபோகக்கூடியது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் அரசியலில் இத்தகைய ஒரு பரந்த பார்வை காணப்படவில்லை, என்கின்ற அதேவேளை இனவாதம் என்ற குருட்டு சித்தாந்தம் அதன் அடிப்படையாக்கப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இலங்கையின் அரசியல் கலாசாரம் இனத்துவ சிந்தனைகளுடன் இரண்டரக்கலந்து விட்டதாயினும் அது தவறானதும் மோசமான பின்விளைவுகளைக்கொண்டதுமாகும், எனவே இஸ்லாமிய இயக்கத்தின் அரசியல் அடிப்படையானது இனவாததின் மீது ஏற்படுத்தப்படலாகாது. அது மனிதநலன், அபிவிருத்தி, சமாதனம் என்கின்ற உன்னதமான அடிப்படைகளில் நிறுவப்படவேண்டும், இத்தகைய ஒரு (Paradigm Shift) மனப்பாங்கு மாற்றமொன்று அவசரமானதும் அத்தியாவசியமானதுமாகும்.

இஸ்லாமியா அரசியலும்- தாராண்மைவாதமும்

தாராண்மை வாதம் (
Liberalism) மேற்குலகில் அதன் மோசமான பதிவுகளை வெளிப்படுத்ததொடங்கியிருக்கும் சமகாலத்தில் இஸ்லாமிய உலகினுள்ளும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்துவருகின்றது, குறிப்பாக நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களிடையே அது ஆதிக்கம் செலுத்திவிடும் அபாயம் நிறையவே இருக்கின்றது. நவீன வழிமுறைகளில் மிகக்குறுகிய சித்தாந்தங்களில் வெளியே வந்து முற்போக்காக எமது செயற்பாடுகளில் நாம் ஈடுபடுதல் என்பது தாராண்மைவாததினை ஏற்றுக்கொண்டு எல்லா தளங்களிலும் நாம் எமது அடையாளத்தை தொலைத்துவிடுவதைக்குறிக்காது. மாற்றமாக எமது சுயம் தொலக்காமலும் அடிப்படைச்சிந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் நிகழாத வண்ணம் எமது செயற்பாடுகளை சமகால உலக் ஒழுங்கின் நிலைமகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நிலையே எம்மிடம் வரவேற்கப்படவேண்டும். இங்கு தாரண்மைவாதத்திற்கும் இஸ்லாமிய சிந்தனைக்கும் இடையிலான பிரிகோடு மிகத்தெளிவாக வரையப்படுதல் வேண்டும்.

சமகால இஸ்லாமிய அறிஞர் வரிசையில் மிகவும் இளையவரான (Tharik Ramadhan) தாரிக் ரமழான் (இமாம் ஹஸன் அல் பன்னாவின் பேரன், சயீத் ரமழானின் புதல்வன்) எழுதிய To Be a European Muslim ஏன்ற நூலில் இதுகுறித்துப்பேசியுள்ளார். பொதுவாக மேற்கிலிருந்து வரும் இஸ்லாமிய அறிஞர்களிடையே இத்தகைய ஒரு எச்சரிக்கையான தன்மை அவசியப்படுவதாய் அவர் உணருகின்றார்
பள்ளிக்கூடங்களில் தாராண்மைவத்ததை மையபடுத்தி மாணவர்களை வளர்த்தெடுப்பதற்கு உள்ள உரிமை, ஒரு மார்க்கத்தின்பால் அல்லது சிந்தனையின்பால நாட்டம் கொண்ட ஒருவர் தனது குழ்ந்தைக்கும் அதன் அடிப்படைகளை வழங்க நினைப்பதும் அதற்கு முயற்சிப்பதும் ஒன்றும் குழ்ந்தைகளின் உரிமைகளை மீறும் செயலாகாது, எனெனில் தாராண்மைவாதத்தை வலுக்கட்டாயமாக சிறுவர்களிடம் பதிக்கும் முயற்சியும்
ஒருவிதத்தில் உரிமை மீறலே அதாவது அவர்களது மார்க்கம் குறித்த அடிப்படைகளை அவர்கள் கற்றுக்கொள்ளும் உரிமையினை மீறுவதாகும். எனவே இங்கு தாராண்மைவாதம் என்பது நாம் எமது குழந்தைகளுக்கு மார்க்கம் பற்றிய அறிவை வளங்காமலிருப்பதாகும், ஆனால் முஸ்லிம்கள் இதற்கு மாற்றமானவர்கள்: குழந்தைக்கு தேவையான எல்லா கற்றல் வசதிகள் வழங்கப்படுவதுபோலவே அவர்களுக்கும் மார்ர்க்கத்தின் அடிப்படைகளும் சொல்லித்தரப்படும். எனவே தாரண்மைவாதம் எமக்குள் உள்வாங்கப்படமாட்டாது.

இதுவே எமது அரசியலிலும், எமது எல்லா நடத்தைகளிலும் தாக்கம் செலுத்தவேண்டும்.

எல்லாத்தரப்பினர்க்கும் தகுந்த இடம் சம காலத்தில்
வழங்கப்படுதல் வேண்டும்

இஸ்லாமிய அரசியல் என்பது அதன் ஆரம்பம் தொட்டே எல்லா தரப்பினர்க்கும் உரிய வாய்ப்பளிக்கப்படவேண்டிய பகுதியாகும். இங்கு எல்லாத்தரப்பினர் என்று நான் குறிப்பிடுவது ஆண்களைப்போலவே பெண்களுக்கும் வாலிபர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவேண்டும், அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில் எமது முயற்சிகளில் அவர்கள் எப்படி பங்கேற்கமுடியாது போகுமே அவ்வாறே எமது வரலாற்றிலும் அவர்களால் பங்கேற்க முடியாதூ போகும். சமகால இஸ்லாமிய உலகில் வாலிபர்கள் மற்றும் பெண்களின் கனிசமான பங்களிப்பு காணப்படுகின்றது, எம் சமூகத்தின் இயல்பான குறுகிய சிந்தனைப்போக்கில் பெண்களுக்கும் வாலிபர்களுக்குமான இடம் நீண்டகாலமாகவே சரிவர வழங்கப்பட்டிருக்கவில்லை, ஆனால் எமது அரசியல் முயற்சியிலும் இதுவே மீட்டப்படுமாயின் அது எம்மை பல விதங்களில் பாதிக்கும். அதுமட்டுமன்றி அவர்களது ஈடுபாடு அத்தியாவசியப்படுகின்ற சூழலில் எம்மிடம் தகுந்த அனுபவமும் ஆற்றலும் உள்ள மனித வளப்பற்றாக்குறை நிறையவே தோன்றியிருக்கும். எனவே இது எம்மிடம் மீண்டும் மீண்டும் மீட்டப்படாதிருக்க இப்போது முதல் எல்லாத்தரப்பினர்க்கும் உரிய இடம் வழங்கப்படுதல் வேண்டும்