Thursday, December 13, 2007

முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் எதிர்கட்சி ஆசனத்தில



முஸ்லிம் காங்கிரஸ் மீண்டுமொருதடவை தான் 28-01-2007 முதல் தற்போதய UPFA அரசுக்கு வழங்கிய ஆதரவை இடைநிறுத்தி மீண்டும் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டுள்ளது, ஆதரவு வழங்கும் போதிருந்த 6 ஆசனக்களுள் 4 மட்டுமே மீண்டு வந்துள்ளன,
தலைவர் ரவுப் ஹக்கீம், செயலாளர் ஹஸன் அலி, தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் பைஸல் காசிம் ஆகியோரே எதிர்கட்சிக்குத்தாவியுள்ளனர் தேசிய அமைப்பாளர் பாயிஸ் மற்றும் நிஸாமுதீன் ஆகியோர் இன்னமும் அரசுபக்கமே இருக்கின்றனர், வரவுசெலவுத்திட்ட வாக்கெடுப்பின்போது இத்தகய ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதால் இது பலவித எதிர்பார்ப்புகளை தோற்றுவித்துள்ளது,அத்துடன் இது குறித்து மு.க தலைவர் விடுத்துள்ள அறிக்கையும் அதில் அவர் குறிப்பிட்டுள்ள விடயங்களும் எமது கவனத்தை ஈர்ப்பனவாக உள்ளன,

"எமது பெருத்தலைவர் அஷ்ரப் எப்போதும் கூறுவார், நிகழ்வுகளை நாமே ஏற்படுத்த வேண்டும், மாற்றங்களை நாமே உருவாக்க வேண்டும், இப்போது தேசியப்பிரச்சினைகளில் ஒரு மாற்றம் தேவைப்படுகின்றது, முஸ்லிம்களுடைய பிரச்சினை கையாளப்படுவதில் மாத்திரம் அல்ல தமிழ உரிமைப்பிரச்சினையும் கையாளப்படுவதில் ஒரு புதிய அனுகுமுறை வேண்டப்படுகின்றது"
வடக்கு கிழக்க்கு முஸ்லிம்களுடைய பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படவில்லை பாதுகாப்பு, பொருளாதார விடயங்கள் குறித்த பிரச்சினைகள் தொடருகின்றன,எமது அடிப்படை உரிமைகள் மற்றும் எமது மார்க்கத்தைப்பின்பற்றும் சுத்ந்திரம் என்பன கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன,அரசு எமது நிலங்களை சூரையாடி மீள்குடியேற்றங்களை அமைப்பதனூடாக நிலைமைகளை மாற்றியமைக்கப்பார்க்கின்றது,
மிகுந்த கௌரவத்துடனே நாம் அரசில் இருந்து வெளியே வருகின்றேம், எமது மக்கள் எமக்களித்த மக்களாணையின் பிரகாரமே எமது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது,

இவ்வாறாக ரவூப் ஹக்கீம் தனது செய்தியாளர் மாநாட்டு உரையின் ஆரம்பத்தில் தெரிவித்திருந்தார், பெருந்தலைவரின் வாசகங்களை கோடிட்டுக்காட்டுவது ஒன்றும் புதிய விடயமல்ல, ஆனால் அஷ்ரப் அவர்களைப்போன்று நிலைமைகளை ஏற்படுத்தும் திறன் ஹக்கீமிடம் குறைவாகவே உள்ளது அரசிலிருந்து வெளியில் வந்தால் அரசு அடுத்த நிமிடம் பெரும்பான்மையை இழக்கவேண்டும் ஆனால் இம்முறை அவ்வாறு நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன,அத்துடன் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை அரசுடன் ஒட்டிகொண்டிருக்க விட்டுவிட்டு வருவதும் தலைமைத்துவத்தின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தப்போதுமானதாகும். அத்துடன் ஹக்கீம் தெரிவித்துள்ள பிரச்சினைகள் எதுவுமே இன்றைய புதிய பிரச்சினைகள் அல்ல அவை காலாகாலமாக இருக்கும் பிரச்சினைகள, மு.கா அரசில் இணைவதற்கு முன்னமும் அத்த்கைய பிரச்சினைகள் இருந்தன, அப்போதெல்லாம் இத்குறித்த மு.கா வின அறிக்கை அரசியலே நடத்தப்பட்டது இப்போது புதிதாக அவற்றுக்காகவும் அரசில் இருந்து வெளியேறுகின்றோம் என காரணம் கற்பிக்கப்படுகின்றது. குறிப்பாக கிழக்கின் காணிப்பிரச்சினை, மற்றும் மத உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் முதன்மைப்படுத்தப்படுகின்றன,


தேசத்துரோகிகள்

பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட முதற்கட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தபோது கிடைத்த தேசப்பற்றாளர் பட்டம், அர்சிலிருந்து வெளியேறுகின்ற போது தேசத்துரோகமாக மாற்றப்படுவது வருத்தமாக இருக்கின்றது, மற்றும் சிங்கள பிக்கு ஒருவர் முஸ்லிம்கள மீண்டும் சவுதிக்கே செல்லவேண்டும் என்று கூறிய இனவாதக்கருத்துக்களும் எமது விலகலின் பின் புலத்தில் இருப்பதாக ஹக்கீம் தெரிவிக்கின்றார் அத்துடன் அரசுனுள் நிகழும் உள்ளக முரன்பாடுகள் ஓழுங்கீனம் என்பனவும் அவரது காரணப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன,


முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றம் திருப்த்திப்படுவதாய் அமைகின்றபோதும், அதற்காக் சொல்லப்பட்ட காரணிகளும், அது நிகழ்ந்த வித்ம் மற்றும் நேரம் என்பன சற்று சிந்திக்க வைக்கின்றது. மகிந்தவின் அரசு முன்னைய நிரைவேற்றதிகார ஜனாதிபதிகளை விடவும், தமது அதிகாரத்தை மிககூடுதலாக துஷ்பிரயோகம் செய்வதாகவே தெரிகின்றது, அத்துடன் யுத்தம் மூலம் தீர்வினைக்கான்பதிலும், தனது ஆய்த பலத்தின் மூலம் ஊடக சுத்ந்திரம், மக்களின் அடிப்படை உரிமைகள், மத உரிமை, பொருளாதார நடத்தைகள் என எல்லவற்றையும் மட்டுப்படுத்தும் ஒருவித சர்வாதிகார ஆடிசிமுறை அமுல் படுத்தப்படுவதாகவே நாம் உணருகின்றேம், எனவே இத்தகைய கட்டத்தில் மு.கா வின் இந்த முடிவானது வரவேற்கப்பட வேண்டியதே.
எனினும் அது தோற்றுவிக்கப்போகும் விளைவுகள் குறித்த ஒருவித ஐயப்பாடு தொடர்ந்தும் நிலவுகின்றது....

  • பாராளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையினை இது பாதிக்காது
  • முஸ்லிம் காங்கிரஸினுள் மேலும் உற்கட்சி மோதலை வலுப்படுத்தும்
  • அரசின் அழுத்தங்களை முஸ்லிம் சமூகத்தின் மீது பிரயோகிக்க இது காரணியாகக் கொள்ளப்படும்
  • கிழக்கில் த.ம.வி.பு கள் அமைப்பின் அடாவடித்தனங்கள் எல்லை மீறும்

போன்ற ஒருசில குறிப்புகளை இங்கு பதிய முடியுமாக உள்ளது
அ.அஸ்மின்