Friday, January 30, 2009

இனத்துவப் போராட்டத்தின் புதிய பரிணாம மாற்றம் -அ.அஸ்மின்

மாவிலாறில் தொடங்கி, முல்லைத்தீவின் இதயம்வரை போய்விட்ட மகிந்த தலைமையிலான இலங்கை அரசின் புலி ஒழிப்புப்போராட்டம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று அரச தரப்பு மிகுந்த நம்பிக்கையுடன் கருத்து வெளியிட்டுக்கொண்டிருக்கின்றது, வடக்கு கிழக்கில் மிகவிரைவில் அமைதி திரும்பும் என்பது அவர்களது கணிப்பு.

வரலாற்றை கூர்ந்து கவனிக்கும் எவரும் இலங்கையின் இனப்போராட்டம் இன்றைக்கு 600 வருடங்களுக்கு முன்னமே தொடங்கிவிட்டதொன்று என்பதையும் அதன் பல்வேறு பரிணாமங்களையும் கண்டுகொள்வர், அது இன்றுவரை தீர்வின்றி தொடர்வதும், ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு அணி இன்னுமொரு அணியினை மிகைப்பது பின்னர் தோல்விகண்ட அணி வெற்றிபெருவதும் மாறிமாறி நிகழ்கின்ற ஒன்றாகவும், அது யுத்தம், அரசியல்போராட்டம் என்றும் பல்வேறு வடிவங்களை கண்டிருப்பதையும் கண்டுகொள்வார்கள். எனவே இப்போதைய இராணுவ வெற்றிகள் நிலைக்கவேண்டுமாக இருப்பின் அரசியல் ரீதியாக இது தீர்க்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை, அந்தவகையில் 1977ற்குப்பின்னதான இனத்துவப் போராட்டத்தின் ஆயுதவடிவமானது விடுதலைப்புலிகள் என்ற மிகவும் சக்திவாய்ந்த போராட்ட இயக்கம் ஒன்றின் தலைமையில் இன்றுவரை மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

 

அப்போராட்ட இயக்கம் இராஜதந்திர ரீதீயில் இனபோராட்டத்திற்கு தீர்வாக தனிநாட்டுக்கோரிக்கையினை முன்மொழிந்து அதனை சர்வதேச அங்கீகாரத்துடன் யதார்த்தப்படுத்தும் முயற்சியின் ஒரு கட்டமாகவே 2002ஆம் ஆண்டு சமாதான பேச்சுவார்த்தையை நோக்கி நகர்ந்தது, ஆனால் ஆயுதபோராட்டத்தில் இருந்த முதிர்ச்சியும் அனுபவமும், அதன் அரசியல் முன்னெடுப்புகளில் இல்லாமல் பேனதும் அதன் தலைமைத்துவம் ஜனநாயக மரபுகளைவிட்டும் வெளியே இருந்து செயற்பட்டதும் இன்று அதன் படுதோல்விக்கு காரணமாகிப்போய்விட்டது, எந்தப்போராட்டமும் அதன் எழுச்சிக்காலம் வீழ்ச்சிக்காலம் என்ற இரண்டு கட்டங்களை அவசியம் தாண்டியேயாக வேண்டும், ஆனால் இவை இரண்டு கட்டத்திலும் நிதானம் இழக்காமல் மிகவும் உறுதியுடனும் அவ்வியக்கத்தால் செயற்பட முடிந்தால் மட்டுமே அது வரலாற்றில் நிலைக்கும் என்ற நியதிக்கு புலிகளும் உட்பட்டேயாக வேண்டும். அவர்கள் வரலாற்றில் நிலைப்பார்களா இல்லையா என்பது இங்கு விவாதப்பொருள் அல்ல, மாற்றமாக இனபோராட்டத்தின் இன்றைய ஆயுதரீதியான பரிணாமம் மாற்றியமைக்கப்படுகின்றது, என்பதும் அது இன்னுமொரு புதிய வடிவத்தை எடுக்கப்போகின்றது, என்ற உண்மையினைக்கண்டு கொள்வதே இப்பத்தியின் நோக்கமாகும்.

 

இலங்கைதீவு அதன் பூகோள அமைப்பில் ஒற்றை நிலப்பரப்பாக இருப்பதைப்போன்று அதன் குடிசார் அமைப்பில் ஒன்றுபட்டதல்ல, பிரித்தாளும் பிரித்தானியாவின் தந்திரோபாயத்திற்கு முன்னமே எமது தேசத்தில் பிரிவினைவாதம் தளைத்துவிட்டது. அது தமிழர் சிங்களவர் என்பதற்கு அப்பால், வடக்கத்தான் கிழக்கத்தான் என்றும், கரைநாட்டுக்காரன் மலைநாட்டுக் காரன் என்றும் வகுபட்டுவிட்டது, அதுமட்டுமல்லாமல் மொழி, மதம், பிரதேசம், குடும்பம், குலம் என நிறையவே பாகுபாடுகள் நிறைந்த ஒரு தேசமாகவே திகழ்கின்றது. எனவே பிரிவினை பேசுவதும் அதன்பால் ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தை திரட்டுவதும் எமது தேசத்தில் கடினமான காரியம் அல்ல,  இதில் காலாகாலம் தோன்றிய அரசியல் இயக்கங்களும் அவர்களது கோசங்களும் அவர்கள் பெற்ற அரசியல் அடைவுகளும் சாடிசியாகும் எனவே குறிப்பிட்ட இலக்கை அடைய முனையும் எவரும் தமது சக்தியாக இத்தகைய பிரிவினைவாத கோசங்களையே நம்பியிருக்கவேண்டிய தேவை இருந்தது.

 

இப்பின்னணியில் 1983ஆம் ஆண்டு நிகழ்ந்த இனக்கலவரம்; புலிகள் பேன்ற ஆயுதக்குழுவினருக்கு ஒரு வரப்பிரசாதமாகிப்போகவே அவர்கள் ஒரு ஆயுதப்போராட்ட இயக்கமாக தம்மை வடிவமைத்து, தேசிய சர்வதேசிய அளவில் மிகவும் சக்திவாய்ந்த ஒரு  அமைப்பாக அவர்களை வளர்த்துவிட்டது, ஆனால் 2002ல் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையின் பின்னர், புலிகளின் முக்கியஸ்தர்களுக்கும் அரச தரப்பு மற்றும் மேற்கு நாட்டு சமாதான மத்தியஸ்த்தர்களுக்கும் இடையில் நிகழ்ந்த பலசுற்றுப்பேச்சுவார்த்தைகள், யுத்தமில்லாத அமைதி சூழல் என்பன, புலிகளின் ஈழப்போராட்டத்தின் மீது வீழ்ந்த போரிடியாகவே கொள்ளப்படவேண்டும், சிங்கள இராணுவத்திற்கெதிராக திரட்டப்பட மனவலிமை, மக்களிடம் இருந்த இனவெறி கொஞ்சம் கொஞமாக தளர்ச்சிகாணத் தொடங்கியது,

 

மறுபுரத்தில் ஐ.தே.கவின் தலைவர் ரணில் ஏற்படுத்திய சமாதான உடன்படிக்கை தமிழர்களுக்கு தனிநாட்டை வழங்கியதற்கு ஒப்பானது என்ற அமைப்பில் தென்னிலங்கை எங்கும் கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத அரசியல் பிரச்சாரத்தின் விளைவாக தென்னிலங்கையின் இனத்துவ உணர்வுகள் முறுக்கேறியிருந்தன. இதுவே மகிந்த இனவாதிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கவும், அதனடிப்படையில் இன்று புலியெதிர்ப்பு யுத்தம் ஒன்றை நிகழ்த்தவும் அவருக்கு வழிசமைத்திருக்கின்றது.  அத்தோடு மேலைத்தேய நாடுகளின் தலையீடுகள் தனிக்கப்பட்டு இந்தியாவின் முழுமையான துணையுடனும் ஆசீர்வாதத்துடனும் இன்று முல்லைத்தீவுவரை சென்று புலிகளை ஒழிக்கும் யுத்தம் வெற்றிகண்டு கொண்டிருக்கின்றது.

 

விடுதலை இயக்கம் என்று தம்மை புலிகள் கூறிக்கொண்டபோதிலும் அவர்களது பயங்கரவாத நடவடிக்கைகளும், நீதி, மனிதம், ஜனநாயகம் என்பவற்றுக்கெதிரான செயற்பாடுகள் அவர்கள் சர்வதேச அரங்கில் தடைசெய்யப்படுவதற்கும், தயக்கமின்றி நேரடியாக எந்த தேசமும் உதவ முன்வரதா அமைப்பாக அவர்களை மாற்றி விட்டிருக்கின்றது. ஒரு இனத்தின் உரிமைக்காகப்போராடும் இயக்கம் இன்னுமொரு இனத்தின் மீது தனது மிலேச்சத்தனங்களை கட்டவிழ்த்து விடுவது எப்படி நியாயமாகும், 1990ல் யாழ்ப்பாணத்திலிருந்தும் வடக்கிலிருந்தும் முஸ்லிம்களை புலிகள் வெளியேற்றினர், ஆனால் அவர்கள் நினைத்ததுபோல அவர்களால் யாழ்ப்பாணத்தை இன்றுவரை பூரணகட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாமலே போயிற்று, அதேபேன்று 2006ல் திருகோணமலையில் மூதூர் என்னும் முஸ்லிம் கிராமத்தில் புலிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனம் இன்று அவர்களை திருகோணமலையை விட்டும் வெளியில் துரத்தியுள்ளது. தனது இனத்தில் மாற்றுக்கருத்துள்ள ஏராளமானேரை கொன்றொழித்தது அவர்கள் மேற்கொண்ட இரண்டாவது அநாகரீகமான செயற்பாடாகும், இன்றுவரை அவர்களால் கொன்றொழிக்கப்பட்ட தமிழ் புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், வாலிபர்கள், யுவதிகளின் எண்ணிக்கை சிங்கள இராணுவதால் பலியெடுக்கப்பட்ட எண்ணிக்கையினைவிடவும் அதிகமாகும் என்ற உண்மை மறைக்கப்படமுடியாது. இவ்வாறாக ஒரு விடுதலை இயக்கம் அதிகூடிய பயங்கரவாத செயற்ப்பாடுகளுடன் தொடர்புடையதாய் இருக்கும் நிலையில் அதன் இருப்பு நிலைத்திருக்கக்கூடியதல்ல, அது ஒரு முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும். அந்தவகையில் மகிந்த இன்று மெற்கொள்ளும் புலியொழிப்பு போராட்டத்திற்கு முழு உலகின் ஆதரவும் உண்டு.

 

ஆனால் யுத்தத்தின் இடையில் அகப்பட்டுள்ள பொதுமக்களின் நிலைமையே மிகவும் கவலையளிக்கின்ற விடயமாகும். புலிகள் பலவந்தமாகவே மக்களை தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் முடக்கியுள்ளனர் என்று பரவலாகப்பேசப்படுகின்றது. அத்துடன் மேற்படி யுத்த நடவடிக்கையுடன் உடன்படாத பல புலிகளின் முக்கிய உருப்பினர்கள் அவ்வமைப்பினால் கைதுசெய்யப்பட்டும் கொலைசெய்யப்பட்டும் உள்ளார்கள் என்றும் இன்னும் சில மேல்மட்ட உருப்பினர்கள் கருணாவுடனும், இலங்கை இராணுவத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்தி முக்கிய தகவல்களை வழங்குவதாகும் அவர்களுள் ஒருசிலர் புலிகளால் கைதுசெய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் நம்பகமான செய்திகள் வருகின்றன இந்தவகையில் நோக்கும் பொழுது புலிகள் தமது இறுதி நிமிடங்களை எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள் என்று கூற முடியுமாக உள்ளது, அதேவேளை அவர்களின் கரங்களில் அமைதியை நேசிக்கும் பொதுமக்கள் அகப்பட்டுக்கொண்டுள்ளார்கள் என்பதும் உண்மையே.

 

 முழு உலக அளவிலும் புலிகள் தமது செயற்திறனைக்கொண்டு மேற்கொள்ளும் அழுத்தங்கள் அனைத்தும் புஸ்வானமாகும் நிலையே இருக்கின்றது, அயல்நாட்டில் தமிழ்த்தேசம் பொங்கியெழுகின்ற போதிலும் அது மத்திய அரசால் கணக்கில் கொள்ளப்படுவதாக இல்லை, தீக்குழிப்புகள், உண்ணாவிரதங்கள் என எல்லாம் இடம்பெறுகின்றபோதிலும் எதுவும் பயன் தருவதாக இல்லை. இது இவ்வாறு இருக்க அரசதரப்பின் கை மிகவும் உயர்ந்திருப்பதும் அது எக்காரணம்கொண்டும் எங்கும் ஒரு தளர்வைக்காட்டுவதாகவும் இல்லை. எனவே இத்தகைய ஒரு நிலைக்கான காரணி அல்லது பின்னணியாக செயற்பாடு எதுவாக இருக்கும். இதுவே இன்று எம் எல்லோருக்கும் முன்னால் உள்ள வினாவாகும்.

 

இலங்கையின் இனபோராட்டம் அதனது ஆயுதரீதியான பரிணாமத்தில் இருந்து இன்னுமொரு பரிணாமத்தை நோக்கி திரும்பும் திருப்பத்தில் இருக்கின்றது என்பதுவே இங்குள்ள பின்னணியாகும், அது பின்வரும் இரண்டு வடிவங்களை எடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது, ஒன்று இனத்துவ எண்ணக்கரு, யுத்தம் என்பவற்றில் கொண்ட அதிருப்தி நம்பிக்கையீனம் என்பவற்றால் ஒரு சாதாரண வாழ்வொழுங்கை ஏற்படுத்திக்கொள்தல்  என இரண்டு இனத்துவங்களும் தீர்மானித்தல், இரண்டாவது புலிகள் தவிர்ந்த மாற்று தமிழ் அமைப்புகளின் பிரசன்னத்துடன் இராஜதந்திர ரீதியிலான போராட்ட ஒழுங்கொன்றில் நுழைவது, இங்குதான் இந்தியாவின் தலையீடு குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புகளும், புலிகள் மேற்கொள்ளும் அமுத்தங்களும் பலப்பிரயோகங்களும், இந்தியாவைப்பொறுத்தவரையில் இலகுவாக நோக்கப்படும் விடயங்கள் அல்ல, அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிலும், தேசிய நலனிலும் பாதிப்பை செலுத்தும் அம்சங்களாகவே நோக்கப்படுகின்றது, எனவே அவசரமாக யுத்தத்தினை நிறைவு செய்து ஒரு இயல்பு நிலையினை ஏற்படுத்துவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் விஜயத்தைத்தொடர்ந்து மகிந்த அறிவித்த 48 மணித்தியால காலஅவகாசம் என்பன இந்தியாவின் மறைகரத்தை தெளிவாக காட்டுகின்றன

 

Indian Forces (IPKF- 1987- Jaffna - Palali)


இந்திய உளவு விமானங்கள், ராடர்கருவிகள், இராணுவ நிபுனத்துவ உதவிகள் என்பன இலங்கை இராணுவத்தின் வெற்றிகளுக்கு பலம்சேர்க்கின்றன, 1987 இன் பின்னர் இந்தியா எப்போதும் மறைமுகமாகவே இலங்கை விடயத்தில் செயற்படும் என்ற நிலைமை இன்னும் தொடர்கின்றது, தமிழ்நாட்டின் அறிக்கை மற்றும் ஆவேச அரசியலை சமாளிக்கும் ஆற்றல் காங்கிரஸுக்கு நிரையவே இருக்கின்றது, எனவே இந்தியாவின் ஆசீர்வாதம் யுத்ததில் புலிகளை தோற்கடித்து அவர்களை உலக அரங்கிலிருந்து முற்றாக அழிப்பதற்கும். புலிகளால் தமிழகத்தில் எழும் அச்சாதாரண நிலைகளுக்கு முற்றுப்புள்ளிவைப்பதுமேயாகும்.
 ஆனால் இந்தியாவின் மேற்படி ஆசீர்வாதம் யுத்தப்பிரதேசத்தில் நிகழும் கடத்தல்கள், மனிதப்படுகொலைகள், பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் போன்ற மனிதம் தொலைக்கும், இனத்துவ வெறியினை மேலெலச்செய்யும் நிகழ்வுகளுக்கு துணைபோகுமாக இருந்தால்  இந்திய இராணுவம் 1987ல் நேரடியாக இலங்கையில் இருந்தபோது ஏற்படுத்திய நிலைகளுக்கும் இப்போதைய நிலைகளுக்கும் மாற்றமில்லாமல் போய்விடும். எனவே இந்தியாவின் இலக்காகவுள்ள புலி ஒழிப்பு நடவடிக்கைக்கும், மென்மையான அரசியல் அமைப்பு, அல்லது மாற்றுக்குழுக்களின் கைகளில் இலங்கையின் இனப்பிரச்சினையினை க்கையளித்தல் என்ற நோக்கமானது விரைவில் அமுல்படுத்தப்படவேண்டும் என்பதில் இந்தியா அதீத அக்கறையுடன் இருக்கின்றது. எனவே இனப்போராட்டத்தின் புதிய பரிணாமத்தை விரைவாக ஏற்படுத்தவேண்டும் என்பதுவே இந்தியாவின் விருப்பமாகும்.

 

இப்போது ஏற்படப்போகும் இனத்துவப் போராட்டத்தின் பரிணாம மாற்றமானது 1956ல் பண்டா- செல்வா ஒப்பந்தத்தைத்தொடர்ந்து நிகழ்ந்த பரிணாம மாற்றத்தின் மறுதலையாக அமைந்துவிடுவதற்கான வாய்ப்பும் இருக்கின்றத, அன்று பண்டாரநாயக்கா இனவாதிகளுடன் கூட்டுசேர்ந்து கொண்டு தனது குடும்ப அரசியலை ஸ்தாபிதம் செய்தபோது ஆயுதப்போராட்டமே தீர்வு என்ற எண்ணக்கரு வேர்விட்டது, இன்று 50 வருடங்களின் பின்னர் மஹிந்த மேற்கொள்ளும் இனவாதிகளுடனான கூட்டும், நிறுவ முயலும் குடும்ப அரசியலும், யுத்தத்தின் மீது உள்ள உலகளாவிய வெறுப்பும் இராஜதந்திர ரீதியில் இனபோரிற்கான தீர்வு நோக்கி இனத்துவப்போராட்டத்தின் பரிணாமத்தை மாற்றி யமைக்கும் வாய்ப்பும் உள்லது,இன்னுமொரு புரத்தில் அது ஒரு விகாரமான ஆயுதப்போராட்டத்தினுள் தள்ளிவிடாமல் இருக்கவேண்டும் என்பது எல்லோரதும் பிரார்த்தனனயாகும்.



Sunday, July 27, 2008

இலங்கையிலோ முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் ஓர் ஊடகமும் இல்லாமை

கொலைகள், பசிப்பிணி மற்றும் துயரங்களுக்கு மத்தியில் வாழும் பலஸ்தீனர்களிடையே 67க்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. ஆனால், இலங்கையிலோ முஸ்லிம்களது கட்டுப்பாட்டில் ஓர் ஊடகமும் இல்லாமை வேதனையை அளிக்கின்றது என ஓமான் டைம்ஸ் பத்திரிகையின் ஆசிரியரும், சர்வதேச ஊடக பயிற்றுவிப்பாளருமான கலாநிதி அஹ்மட் லபிப் ஜபார் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் மீள்பார்வையின் ஏற்பாட்டில் கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அஹ்மட் லபிப் ஜபார் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:

இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. அவை ஒன்றுமே வெளியுலகிற்கு வருவதில்லை. வெளிநாட்டு ஊடகங்களிலும் இவை வெளிவருவதில்லை. இதனால் இலங்கை முஸ்லிம்களுக்கு இவ்வாறான பல்வேறுபட்ட பிரச்சினைகள் இருக்கின்றது என்பது தெரிய வருவதில்லை.

இலங்கை முஸ்லிம்களுக்கு நிறையப் பிரச்சினைகள் இருப்பதும் அவர்களுக்கு என தனியான ஒரு ஊடகம் இல்லாதிருப்பதையும் அறிந்து கொண்டேன். இதற்காக வேண்டி நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. இதற்கும் தீர்வு உண்டு. அதற்காக நாம் இன்றிலிருந்தே அதற்குரிய வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். முன்னைய காலத்தில் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவைதான் புதிய செய்திகள் வெளிவரும். ஆனால் இன்று அவ்வாறில்லை. மூன்று மணித்தியாலயத்திற்கு ஒரு தடைவ புதிய செய்திகள் வருகின்றன. எனவே, பழைய யதார்த்தத்திலிருந்து நாம் மாறுபட வேண்டும்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை நாம் இரண்டாக எடுத்துக் கொள்ளலாம் ஒன்று பாதுகாப்பு மற்றையது மூலவளப் பற்றாக்குறை. பாதுகாப்பு ரீதியானதை எடுத்துக் கொண்டால் அதாவது முஸ்லிம் அல்லாதவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும். அப்போது அந்தப் பிரச்சினையில் இருந்து அதை நாம் குறைத்துக் கொள்ளலாம். சத்தியத்தில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

அடுத்து மூலவளப் பிரச்சினை. இதன் மூலம் பல விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இதில் முக்கியமாக உள்ளது ஊடகப் பிரச்சினை. இது தீர்க்கப்படுமானால் முஸ்லிம்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க முடியும். இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை இரு பகுதிகளில் வெளிக்கொணரப்பட வேண்டும். ஒன்று உள்நாட்டு, மற்றையது வெளிநாட்டுக்கும் தெரியப்படுத்துதல்.

உள்நாட்டு ஊடகங்களிலும் எமது பிரச்சினையை உரிய முறையில் வெளியிட்டு அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

Monday, May 26, 2008

கிழக்கின் தேர்தல் எதிர்பார்த்தது போலவே நிறைவடைந்துள்ளது

இருபது வருடங்களின் பின்னர் பிரிந்த கிழக்கின் தேர்தல் எதிர்பார்க்கப்பட்டது போலவே ஜனநாயகத்தை குழிதோண்டிப்புதைத்துவிட்டு நடந்து முடிந்துள்ளது. முஸ்லிம்களைப்பொறுத்தவரையில் இத்தேர்தல் முடிவுகள் பல்வேறு உண்மைகளையும் படிப்பிணைகளையும் விட்டுச்சென்றுள்ளது. ஒவ்வொருகட்டங்களிலும் நாமும் எமது அரசியல்வாதிகளும் தொடர்ந்தும் படிப்பினைபெறுபவர்களாகவே இருக்கப்போகின்றோமா என்ற பெரிய வினாவுடன் இப்பத்தியை வரைகின்றேன். கிழக்கின் தேர்தல் முஸ்லிம்களின் உண்மையான பலத்தை வெளிப்படுத்தும் ஒரு அரிய சந்தர்ப்பமாகவே எமக்கு முன்னால் வந்து நின்றது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கும் ஒரு இருப்பு இருக்கின்றது, இனப்பிரச்சினையில் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள், முஸ்லிம்களும் ஒரு தனியான இனமாக, தனியான தரப்பாக ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற கோஷங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்கும், அதனை தேசிய சர்வதேசிய ரீதியில் நிருவுவதற்கும் கிடைத்த அரிய சந்தர்ப்பமாகவே கிழக்கின் தேர்தல் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் எமது தலைவர்கள் என கூறிக்கொள்ளும் சுயநல வியாபாரிகளின் செயற்பாடுகளினால் எமது சமூகம் மீண்டும் ஒரு அரிய சந்தர்ப்பத்தை இழந்து நடுத்தெருவில் நிற்கின்றது.

தேர்தலுக்கு முன்னமே முஸ்லிம்தரப்பு குறித்த தேர்தலில் எவ்வாறு பங்கேற்கப்போகின்றது என்பது குறித்து பலரும் பல கருத்துக்களை முன்வைத்திருந்தனர். ஒரு சிலர் முஸ்லிம் தரப்பு அரசுடன் இணையவேண்டும் என்றும், இன்னுமொருசாரார் முஸ்லிம்தரப்பு தனித்துப்போட்டியிடவேண்டும் என்றும் வலுவாக விவாதித்துக்கொண்டிருக்கையில், அரசுடன் கூட்டுச்சேர்ந்துள்ள அமைச்சர்கள் மு.காவின் சின்னத்தில் அல்லாது வேறு ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு மு.காவை அழைத்தனர், இதன் பின்னால் உள்ள நயவஞ்சகத்தனத்தை முதன்மைப்படுத்தி ரவூப் ஹக்கீம் மேற்படி முன்மொழிவை நிராகரித்தார்.

“இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச சந்தையொன்றின் வியாபாரப்பண்டம்” என்ற கருத்து குறித்த தேர்தலின் மூலம் மீண்டும் நிரூபனமாகியுள்ளது. மகிந்தவின் அரசும் பேரினவாத சக்திகளும் இந்தியாவின் நிழலின் கீழ் ஒரு அணியாகவும். எதிர்கட்சி, விடுதலைப்புலிகள் மேற்கத்தேய அரசுகளின் நிழலின் கீழ் ஒரு அணியாகவும் திரண்டு யார் இனப்பிரச்சினை விவகாரத்தை அதிகாரப்பூர்வமாக கையில் எடுப்பது என்று பலப்பரீட்சை நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். எனவே கிழக்கின் தேர்தல் இரு சாராருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே இருந்தது. இங்கு வேதனை தருகின்ற விடயம் என்னவென்றால் மேற்படி சூதாட்டத்தில் முஸ்லிம் தரப்பும் பங்கேற்றுக்கொண்டதுதான். மகிந்தவை கிழக்கின் மாகாணசபைத்தேர்தலுக்குல் வலுக்கட்டாயமாக இழுத்துவந்தது ஐ.தேசியக்கட்சியும் இந்தியாவும்தான். ஐ.தே. தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மீண்டும் மீண்டும் கூறித்திரிந்தது, மறுபக்கத்தில் இந்தியா 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும்படி அதிக அழுத்தம் கொடுத்தது. எனவே மகிந்த மேற்படி இரு நிலைகளின் சாதகங்களின் அடிப்படையில் தேர்தலில் குதித்தார். திரைமறைவில் ஏராளமான விடயங்கள் அரங்கேறி முடிந்தன.

ரவூப்ஹக்கீமும் தனது பங்கிற்கு தானும் தனித்தே போட்டியிடப்போவதாக அறிவித்தார், கருத்துக்கணிப்புகள் செய்தார், புத்திஜீவிகள் மார்க்க அறிஞ்ர்களை சந்தித்தார், என்றாலும் இறுதியில் தான் ஐ.தேவுடன் இணைந்து யானைச்சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்தார், ஹிஸ்புல்லாஹ் உடனடியாக கட்சிதாவினார், தன் குற்றங்களை மறைக்க அவருக்கு கட்சி தாவலைவிட வேறு எதுவும் கை கொடுக்காது என்பது அவருக்கு நன்கு தெரிந்தவிடயம். பதிலுக்கு மு.கா தலைவர்,தவிசாளர்,கூடவே பொதுச்செயலாளர் என மூன்று முக்கியபுள்ளிகள் தமது பாராளுமன்ற ஆசனங்களை துரந்து சமூகத்தின் நலன்கருதி கிழக்கை கைப்பற்றுவோம் என்று வீராப்புடன் களமிறங்கினர்.

தேர்தல் தினமும் வந்தது இருபக்கத்தின் வியாபாரிகளும் தமது நலனுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக எதையும் செய்யத்துணிந்தனர், மு.கா வளர்த்துவிட்ட பாயிஸும், ரிஷாதும் மு.காவிற்கு எதிராகவே மு.காவின் தாயகத்தில் வன்முறைகள் செய்ததாக அறியக்கிடைத்தது. இறுதியாக அரசு வெற்றிபெற்றதாக தேர்தல் முடிவுகளும் வெளியாகின.

மு.கா மீண்டும் ஒருமுறை ஒப்பாரிவைக்கத்துவங்கியது. நியாயமற்ற தேர்தல், பகற்கொள்ளை என்றெல்லாம் கூறியது, மறுபக்கத்தில் யார் முதலமைச்சர் என்பது குறித்த இழுபறிகள் விவாகாரமாயின. ஆனாலும் இருதரப்பும் தமது எஜமானர்களை திருப்த்திபடுத்துவதிலேயே அதிக கவனம் செலுத்தினர். மு.காவும் ஐ.தே.கவும் மேற்கைத்தேயர்களை திருப்த்திப்படுத்தவும், ஐ.ம.சு.கூ இந்தியாவையும் திருப்த்திப்படுத்துவதிலுமே அதிக கவனத்துடன் இருப்பது புலப்படுகின்றது. இதனூடாக மட்டுமே தமது நலன்கள் பேணப்படும் என்பது அவர்களது எதிர்பார்ப்பு.

இத்தேர்தலில் முஸ்லிம்தரப்பு இரு அணிகளாகவே களம் கண்டது, ஒன்று அரசுடன் ஒட்டிக்கொண்டுள்ள தற்காலிக முகவர்கள், அடுத்து மு.கா என்னும் முஸ்லிம் சமூக அடையாளம், இதில் தற்காலிக முகவர்கள் குறித்த கவலை அதிகம் எமக்குத்தேவை இல்லை எனினும் மு.கா குறித்தே எமது அதிக கவனம் செல்கின்றது, மு.கா தனது வரலாற்றில் மீண்டும் ஒருதடவை அதள பாதளத்திற்கே சென்றுள்ளது என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது, கிழக்கிழங்கை முஸ்லிம் காங்கிரஸின் தாயக பூமி, இனப்பிரச்சினையில் முஸ்லிம்களி பங்கு அதிகம் சட்டரீதியாக வலுப்படுத்தப்படவேண்டிய தேவயுள்ள சூழலில், முஸ்லிம்கள் ஆயுதக்குழுக்களாலும், புலிகளாலும் அச்சுருத்தப்படும் சூழலில் நாம் தேர்தலை எதிர்கொண்டோம், எனவே தூய்மையாக சமூகநலனை மட்டும் கருத்தில் கொள்ளும் ஒரு கட்சியாக மு.கா இருக்குமாயின் முஸ்லிம்களின் மொத்தப்பலத்தையும் காட்டுவது பொருத்தமா, அல்லது தமது எஜமானர்களின் கனவுகளை நனவாக்குவது பொருத்தமா, மு.கா இரண்டாவதையே செய்யத்துணிந்தது. ஐ.தே.கவின் நலன்களுக்கு துணைபோவதே தனித்துவத்தலைவரின் முடிவாகியது. முஸ்லிம் சமூகத்தின் நலன்குறித்து எதுவித அக்கறையும் இன்றி முஸ்லிம் சமூகத்தை மீண்டும் ஒருதடவை வேதனை மிகுந்த அரசியல் சூனியத்திற்குள் வலுக்கட்டாயாமக நகர்த்தியதே அவரது சதனைகளாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் தனித்துப்போட்டியிடுவதில் என்ன பாதகம் இருக்கின்றது? இந்த வினாவிற்கு இன்னமும் மு.காவிடமிருந்து உருப்படியான பதில் எதுவும் வந்ததாக அறிய முடியவில்லை. தனித்துப்போட்டியிட்டிருந்தால் ஒன்றில் முஸ்லிம்களின் வாக்குப்பலத்தினை மட்டும் வைத்து கிழக்கின் பெறும்பான்மையினைக்கைப்பற்றியிருக்க முடியும் அல்லது மிகப்பிரதான பேரம்பேசும் சக்தியாக திகழ்ந்திருக்க முடியும். இன்னொருகோணத்தில் அரசுடன் ஒட்டிகொண்டுள்ள தற்காலிக முகவர்களின் வாக்குப்பலவீனத்தை நிரூபித்து முஸ்லிம் சமூகத்தின் பிரதான பிரதிநிதியாக மு.காவை நிலைநிருத்தியிருக்க முடியும். மாற்றமாக மு.கா செய்ததெல்லாம் மீண்டும் எமது தனித்துவம் இழந்து பெரும்பான்மைக்கட்சிகளுடன் கூட்டுச்சேரும் வெட்கம்கெட்டசெயலை அறிமுகப்படுத்தியதும், தற்காலிக முகவர்களின் செயற்பாடுகளுக்கு உரமிடும் வகையில் நடந்துகாட்டியதுமேயாகும்.

தொகுதிவாரியான முடிவுகளை நோக்குமிடத்து குறித்த சில தொகுதிகளில் மு.காவின் பலம் சரிவடைந்திருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது. அத்துடன் பெருன்பான்மைக் கட்சிகளின் தற்காலிக முகவர்களாக செயற்படும் அமைச்சர்கள் தமது வாக்குப்பலத்தை எடைபோடுவதற்கும் மு.கா வழி செய்தது என்றே சொல்லத்தோன்றுகின்றது.

தொகுதிவாரியான முடிவுகளின்படி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை தவிர்ந்த ஏனைய தொகுதிகளை மு.கா இழந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லாத்தொகுதிகளையுமே மு.கா இழந்துள்ளது திருகோணமலை மாவட்டத்தில் மு.கா வெற்றி பெற்றுள்ளது. மிக அதிக அளவிலான தேர்தல் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை யாவரும் அறிந்த விடயமே, பொதுவாக ஜனநாயக அலகொன்றில் இத்தகைய மோசடிகள் ஒன்றும் புதிதல்ல, அதுவும் மிகப்பலவீனமான ஜனநாயக அலகொன்றைக்கொண்ட இலங்கைபோன்ற தேசமொன்றில், தமது சொந்த இலாபத்தை அடிப்படையாகக்கொண்ட அரச இயந்திரமொன்று செயற்படும் சூழலில் இத்தகைய மோசடிகள் இடம்பெறாது என்றும், அல்லது அவ்வாறு இடம்பெற்றாலும் கூட அதனை நீதியின் முன் நிறுத்தி சத்தியத்தை நிலைநாட்டலாம் என்று எதிர்பார்ப்பதும் அரசியல் முதிர்ச்சியின்மையினையே காட்டுகின்றது. எனவே உண்மையான திட்டமிடல் ஞானம் உள்ளவர்களாயின் குறித்த ஒரு சூழல் ஏற்படாமல் எவ்வாறு தேர்தலை நகர்த்துவது என்பதில்தான் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டுமே தவிர, நடந்து முடிந்த பின்னர் ஒப்பாரிவைப்பது அழகல்ல. மு.காவைப்பொறுத்தவரையிலும் ரவூப் ஹக்கிமைப்பொறுத்தவரையிலும் இவை குறித்த அறிவு இல்லாதவர்கள் என்பதை ஏற்க முடியாது, மாறாக தமது நிகழ்ச்சிநிரழுக்குள் மேற்படி விவகாரம் முக்கியத்துவமற்ற ஒன்று என்பதாலேயே அவர்கள் குறித்த விடயத்தை விடுத்து மாற்று வழிகளில் சிந்திக்கவும் செய்ற்படவும் துணிந்தனர். அசத்தியம் ஒருபோதும் நிலைக்காது என்பதற்கு மு.காவின் தோல்வியும் ஒரு உதாரணமாகிப்போனது.

மறுபுரம் அரசுடன் இணைந்துள்ள தற்காலிக முகவர்களின் தேவையெல்லாம், மஹிந்த அரசினையும் அவர்களது திட்டங்களையும் வெற்றிபெறச்செய்வதே தவிர முஸ்லிம் சமூகத்தின் நலன் அல்ல. எனவே இன்று அரசுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகவே வன்முறைகள் செய்வதற்கும் துணிந்துவிட்டார்கள், அப்படி இல்லையென்றால் புத்தளத்தில் உள்ள பாயிஸுக்கும் ரிஷாதுக்கும் திருகோணமலையில் என்ன வேலை வேண்டிக்கிடக்கின்றது. மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்தவர்களை அழைத்து வந்து கள்ள வாக்குப்பதியவைக்கும் ரிசாதின் கேவலமான செயற்பாட்டை என்னவென்று சொல்லுவது. மட்டக்களப்பில் அமீரலியின் அடாவடித்தனங்களையும் அம்பாறையில் அதாவுல்லாவின் கொட்டத்தையும் காணுகின்றபோது தமது எஜமானர்களை திருப்ப்திப்படுத்துவதில் இவர்களுக்கு உள்ள கரிசனையும் கடையர்களின் அரசியல் முறையின் அசிங்கத்தையும் எழுதுவதற்கு வார்த்தைகள் இல்லை. ஆனால் எல்லாமே சமூகத்தின் பெயராலேயே அரங்கேறுகின்றது.

ஒட்டுமொத்தமாக கிழக்கில் முஸ்லிம்களின் பலத்தை நிரூபிக்கக்கிடைதத ஒரு அரிய சந்தர்ப்பத்தை எல்லாத்தரப்புமே பரிகொடுத்துவிட்டு இன்று முதலைமச்சருக்கும் இன்னும் இதர அமைச்சுக்களுக்கும் அடிபடும் அவலம் எம்மை சூழ்ந்துகொண்டுள்ளது. எம்மவர்களுக்கு இதுவல்ல இன்னுமின்னும் பல சந்தர்ப்பங்கள் வரினும் தமது சொந்த நலன் குறித்த நிகழ்ச்சி நிரலை முதன்மைப்படுத்தும் தலைவர்கள் இருக்கும் காலமெல்லாம் எதுவும் பலன் தரப்போவதில்லை.

கிழக்கு மாகாண தேர்தல் குறித்து முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கவேண்டிய அவதானங்களும், நிலைப்பாடுகளும். 23rd March 2008

கிழக்கு மாகாண தேர்தல் குறித்து முஸ்லிம் சமூகம் கொண்டிருக்கவேண்டிய அவதானங்களும், நிலைப்பாடுகளும்.

தேர்தலின் உள்நோக்கம்:

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அடிப்படையான தீர்வுகள் எதுவும் எட்டப்படாத சூழலில் கிழக்கு மாகாண மக்களுக்கு ஜனநாயக, இயல்பு வாழ்வைப்பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அல்ல, மேற்படி தேர்தலைநோக்கி அரசு துரிதகதியில் செயற்படுகின்றது. மாற்றமாக 1963முதல் ஈழப்போராட்டம் அல்லது தமிழ் தாயகப்போராட்டத்தின் மிகவுமே அடிப்படையான கோரிக்கைகளுள் ஒன்றாக வடகிழக்கு இணைப்பு அமைந்து வருகின்றது, 2005ல் பதவிக்கு வந்த மகிந்த தலைமையிலான அரசு புலிகளைப் பலவீனப்படுத்துவதே இனப்பிரச்சினைக்கான தீர்வாக கருதி செயற்பட்டுவருகின்றது (அதன் நியாயங்களையும் சாத்தியப்பாடுகளையும் ஆராய்வதைத் தவிர்க்கின்றேன்) அதன் ஒரு கட்டமே நடந்து முடிந்த உள்ளூராட்சித்தேர்தல்களும், நடக்கவுள்ள மாகாணசபைத் தேர்தல்களுமாகும்.

இனப்பிரச்சினைத்தீர்வு முயற்சிகளில் நோர்வே ஓரங்கட்டப்பட்டதும்; இந்தியா திரைமறைவில் பங்கேற்றிருப்பதும் இங்கு அவதானிக்கத்தக்கது. 1987ல் இடம்பெற்ற 13வது திருத்தச்சச்சட்த்தினைத்தொடர்ந்து 1988 நவம்பர் 19ம் நாள் இந்திய அமைதிகாக்கும் படையின் உதவியுடன் நடாத்தப்பட்ட வடகிழக்கு மாகாணத்தேர்தலின் பின்னர் நடக்கவுள்ள தேர்தல் இதுவாகும், இத்தேர்தலுக்கும் இந்திய நலன்களுக்கும் அதிக தொடர்பு இருப்பது வெளிப்படையாகவே தெரிகின்றது, P.சந்திரசேகரன் மற்றும் இராதாகிருஷ்னன் ஆகியோரது செயற்பாடுகளையும் இங்கு காணக்கூடியாதக இருப்பதும் இதன் பின்னணியிலேயாகும், அனைத்துக்கட்சிக்குழு, 13வது திருத்தச்சட்டத்தின் பிரகாரமே இனப்பிரச்சினைக்காணதீர்வு அமைய வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது, அதுவே இந்தியாவினதும் விருப்பம், வடகிழக்கு இணைவை இந்தியா விரும்பவில்லை, அத்துடன் புலிகளின் தற்போதய ஆயுதப்போராட்ட வளர்ச்சியும் அது தமிழகத்தில் தோற்றுவிக்கும் அலைகளும் இந்தியாவை உசார்படுத்தியுள்ளது. இதுவே இந்தியாவின் கரிசனைக்கு காரணமாகும்.

எனவே தமிழ் ஈழப்போராட்டத்தில் அதிகம் ஈடுபாடுள்ள, ஈழப்போராட்டம் குறித்த அடிப்படையான கருத்துக்களைக்கொண்டுள்ள பழைய தமிழ் அரசியல் இயக்கங்களைவிடவும் அரசியல் முதிர்ச்சியில்லாத வெளிஉலகுடன் அதிகம் தொடர்பில்லாத TMVP தற்போது அரசுக்கு கிடைத்துள்ள சிறப்பான துருப்பு எனவே எப்படியாவது மாகாணசபைத்தேர்தலை நடாத்தி TMVP யை ஆட்சியில் அமர்த்துவதுவே அரசின் திட்டம். இதனூடாக

Ø வடகிழக்கு பிரிப்பை உறுதிசெய்தல், சட்டமயமாக்குதல்

Ø புலிகளை பயங்கரவாத இயக்கமாக அடையாளப்படுத்துதல்

Ø மகிந்தவின் செய்ற்பாடுகளுக்கு சர்வதேச அங்கீகாரமொன்றை பெற்றுக்கொடுத்தல்

Ø பலவீனமான தமிழ் குழுவொன்றிடம் ஆட்சியை வழங்குவதனூடாக தமக்குத்தேவையான நிக்ழ்ச்சி நிரழொன்றினை நடைமுறைப்படுத்த முடியுமாக இருத்தல்.

மேற்படி அடைவுகளுக்கான நிகழ்ச்சி நிரழ் (இந்திய, இலங்கை அரசுகள் மற்றும் TMVP, JVP, Muslim Ministers and (UPFA) Alliance Parties) ஆகியவற்றின் முழுமையான பிரசன்னத்துடன் அல்லது எதிர்ப்பில்லாதா சூழலில் அல்லது எதிர்க்க முடியாத சூழ்நிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது,

முஸ்லிம்களின் நிலை

அரசு முஸ்லிம் தரப்பை அதன் வழமையான ஆசைவார்த்தைகளுடன் தேர்தல் உடன்படிக்கையொன்றுக்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளது, முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்குத்தருவதற்கு பேரம்பேசவும் தாம் தயார் என்று அரசு தரப்பு தெரிவிக்கின்றது (தேர்தல் பிரச்சாரத்தின் போது அல்லது முதலைமைச்சாரானதன் பின்பு அவர்களை குண்டுவைத்துக்கொன்றுவிட்டு தமக்கு வேண்டியவரை முதலமைச்சாராகுவது ஒன்றும் இயலாத காரியமில்லை)

பிள்ளையான் என்னும் ஒரு பிழையான தெரிவின் பின்னால் முஸ்லிம்கள் தமது வாழ்வை அடகுவைக்க முடியாது எனவே அரசுடன் இணைதல் என்பது விவாதமின்றியே முடிவிற்கு வருகின்றது.

எதிர்கட்சியுடன் (UNP) இணைவதும் மிகவும் வேடிக்கையானது, குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பது போன்ற ஒரு செயலையே UNP மேற்கொள்கின்றது, SLMC மற்றும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு எதிரான ஒரு முக்கோண போட்டியையே UNP எதிர்பார்க்கின்றது, த.தே.கூ வுடனும் புலிகளுடனும் UNP ற்கு என்ன உடன்பாடுகள் உள்ளன என்பது வெளிப்படையாக அறியப்படாத விடயங்கள்.

இத்தகைய மோசமான சூழ்நிலை இருக்கும் நிலையில் முஸ்லிம்தரப்பு : தமிழ்ர்தரப்புக்குறித்து பூச்சிய நிலைப்பாட்டுடன் முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை மட்டும் கருத்தில் கொண்டு தேர்தலில் தனித்துப்போட்டியிட்டு முஸ்லிம்களின் வாக்குப்பலத்தை நிரூபிப்பதுவும், தேர்தல் முடிவுகளின் பின்னர் தாம் எந்தத்தரப்புடன் இணைவது என்று தீர்மானிக்கும் போக்கே இங்கு மிகவும் பொறுத்தமானதாகும்

இதில் உள்ள சாதகங்கள் :

Ø முஸ்லிம்களின் வாக்குப்பலம் சிதைவதத்தடுக்க முடியும்

Ø முஸ்லிம்களின் சரியான பலத்தைக்காட்டமுடியும் (சில போது ஆட்சியமைக்கும் பெரும்பான்மை எமக்கு கிடைக்கவும் முடியும்)

Ø தேர்தல் காலத்தில் அனைத்து தரப்புகளுடனும் நல்லுறவைப்பேண முடியும்

Ø இதனால் தேர்தல் அசம்பாவிதங்களை க்குறைக்கமுடியும் எம்மைப்பகைத்துக்கொள்தல் தமக்கு கேடு என்று எதிரிக்குப்புரிய வைத்தல்

Friday, January 25, 2008

தமிழ் மற்றும் முஸ்லிம் தேசியவாதங்களை அங்கீகரிக்கின்றீர்களா?

http://thesamnet.co.uk/?p=327

அவநம்பிக்கை கசப்புணர்வு இயலாமை தெளிவின்மை போன்ற உணர்வுகளின் ஆதிக்கத்தில் எழும் கருத்தாடல்கள் பெரிதும் மலினப்படுத்தி எம்மை நாமே கேவலப்படுத்துவதில் கொண்டுபோய் நிற்கின்றது.

மலினப்படுத்துவதை குறைத்தல் எம்மை நாமே கேவலப்படுத்தவதை நிறுத்தல் என்பதை பிரதான இலக்காக் கொண்டு அதன் அடிப்படையில் ஒரு ஆரோக்கியமான கருத்தாடலை முன்னெடுக்க உதவுதல் என்பதை தொலை நோக்காகக்கொண்டு ஒரு திசைப் பயணத்துக்கான முதல் அடியை நம்பிக்கையுடன் வைக்கிறேன்.

ஒரே இரவில் நாம் எல்லாவற்றையும் மறந்து ‘நாளை நமதே’ என்று ஒன்றிணைந்து கட்டிப் பிடித்து ஆடிப்பாட முடியும் என நான் கருதவில்லை. இன்றைய நிலையில் அப்படி தமிழரை ஒன்றிணைக்கும் ஒரு பாடல் அல்லது ஒரு கோசம் அல்லது ஒரு கொள்கை இல்லை. எல்லாம் மலினப் படுத்தப்பட்டுவிட்டன.

இணையத்தில் கருத்தாடுகின்ற அவதானிக்கின்ற அனைத்து தரப்பினருக்கும் சில அடிப்படையான வினாக்களை இங்கு முன்வைக்கிறேன். அவற்றுக்கான எனது மனப் பதிவுகளையும் தந்துள்ளேன். இணையத்தில் உரையாடும் அனைவரும் தமது தனிப்பட்ட கண்ணோட்டங்களை முன்வைக்க வேண்டும் என்பதே எனது பணிவான கோரிக்கை. - யாதவன்

(இப்பதிவில் புதிய கேள்விகள் இணைக்கப்படும். தயவு செய்து கேள்விகள், அது தொடர்பாக கருத்தாளர்கள் பதிவு செய்துள்ள கருத்துக்கள் தொடர்பாக மட்டும் கருத்துக்களைப் பதிவு செய்து ஒத்துழைப்பு வழங்கவும். தேசம்நெற்)

என்ற பதிவிற்கு எமது பதில்........


என்னைப்பொறுத்தவரையில் சிங்கள,தமிழ்,முஸ்லிம் தேசியவாதம் என்பவற்றின் தேவை என்ன? என்பதும் அதன் நடைமுறைவடிவம் என்ன? என்பதுமே மிகுந்த கவனத்தை ஈர்க்கின்ற அம்சங்களாகும். சமகால உலக ஒழுங்கை நோக்கும் போது குறுந்தேசியவாதம்,பிரதேச வாதம், பெருந்த்தேசியவாதம் என்பன வலுவிழந்து மனிதன் பூகோளக்கிராமம் என்ற எண்ணக்கருவை நோக்கிச்செல்வதைக்காண முடிகின்றது, பல்வேறு நாடுகள் தம்மை ஏதாவது ஒரு கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்வதிலும், தமது பலத்தையும் பாதுகாப்பையும் உறிதிசெய்வதிலும் அதிக கவனத்துடன் செயற்படுவதைக்காண முடிகின்றது.

இந்நிலையில் எமது இனத்துவம் சார்ந்த தேசியவாதம் ஏன்? எதற்காக என்ற வினா எம்முன் எழுகின்றது. "மனிதன் வாழ்தல் அவசியம்" எனவே வாழ்வது அடிமையாக வாழமுடியாது தான் சுதந்திரமாக வாழ்வேண்டும், தனது தேவைகள் நிரைவு செய்யப்படுதல் வேண்டும், தனது மொழி நாகரீகம் கலாசரம், பண்பாடு என்பன பாதுகாக்கப்பட்டு கௌரவமான வாழ்வு தேவை என்பதுதான் எமது எதிர்பார்ர்ப்பு, இதனை அடைந்து கொள்வதற்காகத்தான் நாம் தேசியவாதத்தை முன்னிறுத்துகின்றேம், இதுதான் இன்று தேசியவாதம் குறித்த கருத்தாளர்களின் நிலைப்பாடாக உள்ளது.

இக்கருத்தில் உடன்படுகின்ற எந்த தேசியவாத சிந்தனையாளனும் அல்லது செயற்பாட்டளனும் தனக்குள்ள அதே தேவைகள் மற்ற மனிதருக்கும் உண்டு என்பதில் மறைக்கருத்துடன் இருக்க வாய்ப்பில்லை. அப்படியாயின் சிங்கள, தமிழ், முஸ்லிம் தேசியவாத சிந்தனை பரஸ்பரம் அங்கீகரிக்கப்படவேண்டிய ஒன்றே.ஆனால் இதன் நடைமுறைவடிவம் முற்றிலும் மாறுபட்ட, முரண்பாடுகளின் தொடராகவே உள்ளது,

பூகோளரீதியான இருப்பு: இங்கு முதன்மையாக எடுத்தாளப்படுவது பூகோளரீதியான இருப்பும் எல்லைப்பகிர்வுமாகும். இலங்கையின் இனமுரண்பாட்டு வரலாற்றில் அதில் நேரடியாக பங்கேற்ற அரசுதரப்பு தமிழரின் பூகோள இருப்பினை கேள்விக்குள்ளாக்கினர், இடையூறுசெய்தனர், இனப்படுகொலைகள் செய்தனர், யுத்தம் பொருளாதாரத்தடை விதித்தனர் என்பது வரலாற்று உண்மை, ஆனாலும் அரசு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. அப்படி செய்திருந்தால் இன்று கொழும்பிலும் ஏனைய பகுதிகளிலும் தமிழ் அடையாளம் இருந்திருக்காது, ஆனால் விடுதலைப்புலிகள் 1990ல் வடக்கில் அத்தகையதொரு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர், அதுமட்டுமன்றி அதுவே அவர்கள் செய்த மாபெரும் தவறு என்றும் ஏறுக்கொள்கின்றனர், தலைவரின் சார்பில் எத்தனையோ பேர் மன்னிப்புக்கோரினார்கள், வடக்கைப்போன்றே கிழக்கிலும் இத்தகைய அச்சுறுத்தல்கள் அடிக்கடி தேன்றின திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர், ஏன் அண்மைய கிழக்கின் புலிச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கும் புலிகள் மூதூரில் மேற்கொள்ள முனைந்த இனச்சுத்திகரிப்பு முயற்சியே தொடக்க விழாவாக அமைந்தது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது, ஆனால் இன்னமும் அவர்களது சிந்தனைத்தளத்தில் முஸ்லிம்தேசியவாதம் அங்கீகரிக்கப்படவில்லை, புலிகள் அங்கீகரித்தாலும் இல்லாவிட்டாலும் இருக்கும் யதார்த்தமான தேசியவாதம் மறைக்கவோ மறுக்கவோ முடியாதது.

நேரடி அரசியல் ஈடுபாடு: முஸ்லிம்களை "இஸ்லாமியத்தமிழர்கள்" என்ற அடைமொழியுடன் அடையாளப்படுத்தும் துரோகத்தனம் என்றோ தொடங்கிவிட்டது, எஸ்.ஜே.வி.செல்வநாயக் தொடங்கி இன்றைய இரா.சம்பந்தன் வரை அந்த அடைமொழி தொடர்கின்றது, இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக த.வி.கூ முஸ்லிம் ஒருவரை தாம் சார்பாக பாராளுமன்றிலும் அமர்த்தியுள்ளது, சட்டத்தரணி இமாம் அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள தொடர்பு அவருக்கும் தமிழர்களுக்கும் உள்ள தொடர்பைவிடவும் குறைவானதே, அத்தகைய ஒரு பொம்மை அடையாளத்தினூடாக முஸ்லிம்களை தமது கபடநாடகத்தினுள் இழுத்துக்கொள்ளும் முயற்சி மிகக்கேவலமானதுவே. முஸ்லிம்களை மறுக்கும் தமிழ்த்தேசியவாதம் நடைமுறை அரசியலிலும் தம்முடன் முஸ்லிம்களை ஈர்த்துக்கொண்டு தமிழர் போடும் எச்சில் இலைக்காக காத்திருக்கும் இழிநிலைக்கும் அவர்கள் போடும் தாளத்திற்கு நாட்டியம் ஆடுபவர்களாகவும் நடத்த முயற்சிக்கும் கபடத்தனம் இன்னமும் எஞ்சியிருக்கின்றது, அஷ்ரப் தனது அரசியல் ஆரம்பமாக தமிழ்ரசுக்கட்சியையும், தமிழ்ர் விடுதலையையும்தான் கையில் எடுத்தார், அண்ணன் அமிர்தலிங்கம் விடுதலை பெற்றுத்தராவிட்டால் தம்பி அஷ்ரப் அதனைப்பெற்றுத்தறுவேன் என்று ஆக்ரோஷமாய்ப்பேசியதும் தமிழர் தன் இரத்ததால் அஷ்ரபிற்கு வீரத்திலகம் இட்டதும் வரலாறு, அதே தமிழரால்தான் அஷ்ரப் தனி அரசியலுக்கும் வந்தார், உயிரும் துரந்தார். இத்தகைய நயவஞ்சகத்தனம் இன்னும் தொடரும் நிலையில் தமிழர் தரப்பு முஸ்லிம் தேசியவாதத்தை எப்படி அங்கீகரிக்கப்போகின்றது?

மேற்குறித்த இரு பாரிய பகுதிகளில் தமிழர்தரப்பின் ஓரவஞ்சனை இன்னோரன்ன அன்றாட நடத்தைகள் பலவற்றிலும் இருக்கத்தான் செய்கின்றது. தேசியவாதம் என்ற எண்ணக்கருவை வெறும் கொள்கையளவில் ஏற்று நடைமுறைவடிவில் மறுதலிக்கும் நிலை மாறவேண்டும், அது முதலில் தமிழர்தரப்பிலிருந்துதான் ஏற்படுத்தப்படவேண்டும், அல்லாதபட்சத்தில் இனத்துவ முரண்பாடு முடிவடையாது....

Thursday, December 27, 2007

இஸ்லாமிய அரசியல் சிந்தனைத்தளத்தில்; ஜனநாயகம் (ஆங்கில மூலம் கலாநிதி அஸாம்.எஸ்.தமீமி - தமிழில் அ.அஸ்மின்

பகுதி 01:

கடந்த இரு நூற்றாண்டு காலத்தில் இஸ்லாமிய அரசியல் தளத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும், ஜனாநாயக சிந்தனையின் தாக்கம் செலுத்தியிருக்கின்றது. அத்துடன் கடந்த இரு நூற்றாண்டு காலத்தின் அரபு ஆரசியல் சிந்தனையாளர்களான Rifa'a Tahtawi (1801-73), Khairuddin at-Tunis (1810-99), Jamal ad-Din al-Afghani (1838-97), Muhammad Abduh (1849-1905), Abdurrahman al-Kawakibi (1849-1903), Rashid Rida (1865-1935), Hasan al-Banna (1904-49), Ali Abd Ar-Raziq (1888-1966), Sayyid Qutb (1906-66), Sa'id Hawwa, and Malik Bennabi (1905-73).அகியோரது கருத்துக்களிலும், செய்யத் குத்ப் உடைய அரசியல் கருத்துக்களில் மௌலானா மௌதூதி ( 1903- 79) தாக்கம் குறித்தும் ராஷித் கண்ணூஸியுடைய கருத்துகளில் மாலிக் இப்னு நபியுடைய சிந்தனைத்தாக்கம் குறித்தும் எமது சமகால இஸ்லாமிய அமைப்புகளில் ஜனநாயாத்தின் தாக்கம் குறித்தும் கருத்துக்களை பதிவது இவ்வாய்வின் நோக்கமாகும்.

நவீன அரபு தேசியவாத எழுச்சியுடன் ஜனநாயகமும் அரபு அரசியல் தளத்தில் ஆதிக்கம் செலுத்ததொடங்கிவிட்டது.ஜனநாயகம் பற்றிய எண்ணக்கருவானது பலதரப்பட்ட அரசியல் சமூக மேம்பாடுகளைத்தொடர்ந்து அரபு உலகில் வளர்ச்சிகாணத்தொடங்கியது.அரபு அறிவியல் உலகில் ஜனநாயகம் குறித்த கலந்துரையாடலகளை நோக்கும் பொழுது

Rifa'a Tahtawi (எகிப்திய ஜனநாயகத்தின் தந்தை) எழுதிய Takhlis Al-Ibriz Ila Talkhis Bariz,(1834) என்னும் நூலில் அவர் குறிப்பிட்டுள்ள பிரெஞ்சுப்புரட்சி மற்றும் பிரெஞ்சின் ஆட்சி முரைகள் குறித்த கருத்துக்களில் இருந்தும், அவர் ஜனநாயகத்தை இஸ்லாமிய அரசியல் முறைமைகளுடன் ஓப்பிட்டு இஸ்லாத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக காட்டமுனைவதிலிருந்தும் கண்டு கொள்ள முடியுமாக உள்ளது. அத்துடன் மத சுதந்திரம் என்பது மதநமிபிக்கையின் பால் உள்ள சுதந்திரம்தான், எனவே இஸ்லாம் இதனை அங்கீகரிக்கின்றது, இதனைப்போலவே அரசியலிலும் மாற்றுக்கருத்து உள்ளதனமையும் மார்க்கத்துடன் முரண்பாடு உடைய விடயம் இல்லை என அவர் தனது கருத்துக்களை முன்வைக்கின்றார்.

இத்தொடரில் மிக முக்கியமான ஒரு அம்சமாக Khairuddin At-Tunisi அவர்களுடைய Aqwam Al-Masalik Fi Taqwim Al- Mamalik (The Straight Path to Reforming Governments) நூல் அமைகின்றது. அதில் அவர் அப்போதைய அரசியல் முறைமையினை எவ்வாறு சீராக்கம் செய்தல் என்ற கருத்தில் அவர் சொன்ன இரு கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன: அப்போதய சிந்தனையாளர்களை நோக்கி, மக்களின் அந்தஸ்த்தினை உயர்த்துவதைவிடவும் அவர்களை பண்பட்டவர்களாக கலாசாரமுடையவர்களாக நாகரீகம் உடையவர்களாக மாற்றுவதில் கவனம் செலுத்துக்கள், அதேபோன்று மக்களே எனைய தேசங்களிடமிருந்து முன்மாதிரிமிக்க சிந்தனைகளையும் நடத்தைகளையும் உதாசீனம் செய்வதை விட்டும் விலகி அவற்றின் நல்ல தன்மைகளை உங்களிடமும் ஏற்படுத்திக்கொள்ளுங்கள், அவை முஸ்லிமல்லாத நாடுகளாயிருப்பினும் அங்குள்ள கண்டுபிடிப்புகள் முற்போக்கான அம்சங்களை புரந்தள்ளிவிடவேண்டாம். எனவே இவ்வாறு அவர் குறிப்பிடுவது அரசியல் ஒழுங்குகளையும் சேர்த்துத்தான் அமைகின்றது.

அனால தியுனிஸியாவின் Ghannouchi மாறுபட்ட கருத்தைக்கொண்டிருந்தார் அவர் Khairuddin அக இருக்கட்டும் அல்லது ஏனைய சமகால இஸ்லாமிய அறிஞர்களாக இருக்கட்டும் அவர்கள் இஸ்லாத்தின் மீது சந்தேகம் கொண்ட்வர்களாக அல்லது மாற்றமொன்றை அறிமுகப்படுத்துபவர்களாகவே இருந்தார்கள் என்கின்றார், அத்துடன் அவர்கள் முயற்சிப்பதெல்லாம் சமகால, பண்டைய அறிஞர்களின் கருத்துக்களுக்கு இசைவாக இஸ்லாமிய முறைமைகளில் மாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்குத்தான், அத்துடன் மேற்கின் இரவல் அரசியல் முறைமைகளை சட்டபூர்வமாக்குவதற்குத்தான் அவர்கள் முயற்சிக்கின்றார்கள்:

ஆனால் தீட்சன்யம் மிக்க அறிவு முஸ்லிமுடைய தூரநோக்குடன் மிகவும் பின்னிப்பிணைந்தது:வஹியுடைய வரவானது படைப்பாளனது படைப்புகளுக்கான பூரணத்துவமிக்க வழிகாட்டலாகவே அமைகின்றது, அதில் எல்லாமே அடங்கப்பெற்றுள்ளது. என்றகருத்தின் அடிப்படையில்
Khairuddin தனது திட்டங்களை அமுல்நடாத்தும் ஒரு கட்டமாக (As-Sadiqiyah School for teaching modern arts and sciences within an Islamic framework) என்ற ஒரு கலைக்கூடத்தை நிறுவினார், அதில் எமது அடிப்படை மூலாதாரங்களின் மூலமும், அவற்றை திறம்பட கற்றுக்கொள்வதனூடாகவும் எமக்கான மிகவும் வினைத்திறன் மிக்க நிர்வாக கட்டமைப்புகளையும், சிந்தனைகலையும் உருவாக்க முடியும் ,அதனூடாக சமகாலத்தில் நிலவும் சர்வாதிகார ஆட்சி முறைமையினை மாற்றியமைத்து, மேற்கிலிருந்து மேற்கொள்ளப்படும் அரசியல் பிரதீயீட்டும் தன்மையினையும் கட்டுப்படுத்த முடியும் என Khairuddin நம்பினார்.

Jamal ad-Din al-Afghani (1838-97)

ஜமாலுத்தீன் ஆப்கானி சமகால அரசியல் குளறுபடிகளுக்கு காரணமாக'adl (justice) and shura (council) நீதம் மற்றும் சூரா முறைமையில் தோன்றிய குறைபாடுகளே காரணம் என்கின்றார். மக்கள் தேர்ட்தல்கள் மூலம் 'adl (justice) and shura (council) அகியவற்றை நிறுவும் முயற்சிகளில் அதிகம் ஆர்வமும் உரிமையும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கருதுகின்றார்

இவரது கருத்துக்கள் எழுச்சி மிக்கனவாக அமைந்துள்ளது; மக்கள் தேர்தல் மூலமும், சூறா உருப்புரிமை மூலமும் அரசியலில் நேரடியாக பங்குபற்ற வேண்டும், என்ற கருத்தை இவர் கொண்டுள்ளார்:('The Despotic Government', published in Misr on 14 February 1879,) எதேச்சாதிகாரமான அராசாங்கம் என்ற தலைப்பில் மிஸ்ர் நாளிதழில் ஆப்கானி எழுதிய கருத்துக்கள் பின்வருமாறு அமைந்துள்ளன " எதேச்சாதிகாரமான அரசாங்கமே மக்கள், மக்களாட்சி தொடர்பில் கருத்துக்களைப்பெற்றுக்கொள்ளாமலிருக்கும்படி செய்கின்றது, மக்களாட்சியே உண்மையான மகிழ்ச்சி அமைதி நீதி என்பவற்றின் வடிவமாகும். மக்கள் தமது நடத்தைகள் குறித்தும் கொடுக்கல்வாங்கல், வியாபாரம், இதர நடத்தைகள் தொடர்பிலும் அக்கரையுடன் கூடிய முற்போக்கான அரச முறைமையே மக்கள் ஆட்சி என அடையாளப்படுகின்றது. உண்மையாக மக்கள்: மக்களால் நடத்தப்படும் ஆட்சியிலேயே மக்களாக மதிக்கப்படுவர், எதேச்சாதிகார ஆட்சியில் மக்கள் மிருகங்களுக்கு ஒப்பானவர்களே. மக்களாட்சி எதேச்சதிகார ஆட்சியின் எதிர்வடிவம், எதேச்சாதிகாரம் களையப்படுவதே மக்களாட்சி சிறப்பாக ஆட்சி செய்வதன் முதல் படி, என்று தனது அரசியல் சார்ந்த கருத்தை அவர் முன்வைக்கின்றார், அத்துடன் மக்களாட்சி என இவர் இங்கு குறிப்பிடுவது தாராண்மைத்தன்மை நிரைந்த அமைப்பை அல்ல, மாற்றமாக மிகவும் கட்டுக்கோப்பான அரசியல் முறைமையை ஆகும்.


Muhammad Abduh (1849-1905)


முஹம்மது அப்துஹு, 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் வாழ்ந்த இஸ்லாமிய சமுக அறிஞர், அவர் அரசியல் குறித்து கருத்து வெளியிடும் போது, இஸ்லாமிய அரசியல் சிந்தனைகளுக்கும் மேற்கத்தேய அர்சியல் சிந்தனித்தளத்திற்கும் நிறையவே வேறுபாடுகளும் தூரமும் நிலவுகின்றது அவை இரண்டும் குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும், அவற்றிற்கிடையேயான உடன்பாடுகள்,முரண்பாடுகள் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டும்.அதன்படி நோக்கின் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்டையாகிய : நலன் (maslaha -interest)என்பதும் பயன்பாடு ( manfa'a - utility) என்பதும் மேற்கத்தேய அரசியலிலும் அதே அர்த்தத்தில் கையாளப்பட்டிருப்பதை அவர் காண்கின்றார். ஜனநாயக சூழலில் சூரா (shura) இஸ்லாமிய அரசியல் களத்தில் இஜ்மா (ijma' with consensus) ஆகிய இரண்டும் ஒன்றே என்ற கருத்தை முஹம்மது அப்துஹு கொண்டுள்ளார்.

இறையாட்சி என்பதில் முஹம்மது அப்துஹு உடன்பாடானக்ருத்தை கொண்டிருக்கவில்லை மாற்றமாக ஹாகிம்(governor), காழி (judge), முப்தி என்பவர்கள் மனிதர்களாகவே இருந்துள்ளனர் என்றகருத்தையும் கொண்டுள்ளார். சமகால நவீன மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கவேண்டுமாயின், இஜ்திஹாத் மீண்டும் முடுக்கிவிடப்படவேண்டும், அத்துடன் இதுவரை பின்பற்றப்பட்ட பிற்போக்குத்தனம் களையப்படவேண்டும், பாராளுமன்ற அரசியல் முறையினை இவர் சிபாரிசு செய்கின்றார், பன்மைத்துவத்தை ஆதரிக்கும் இவர், சமூகத்தின் ஒற்றுமையும் ஐக்கியமும் மேம்பட வேண்டுமாயின் இத்தகைய அரசியல் மாற்றம் தேவையானதுவே என்ற கருத்தை இவர் கொண்டுள்ளார்.

Abdurrahman Al-Kawakibi (1849-1903) அப்துர்ரஹ்மான் அல் கவாகிபி Taba'i' Al- Istibdad (The Characteristics of Tyranny) - ஆட்சியாளனின் குணாம்சங்கள், மற்றும் Umm Al-Qura (The Mother of Villages), தாய்த்தேசம் ஆகிய இரண்டு நூல்களிலும் அரசியல் சார்ந்த தனது கருத்துக்களை முன்வைக்கின்றார், மேற்படி நூலில் எதேச்சாதிகார அரசு குறித்தும் அதன் பல்வேறு தோற்றப்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசியலுக்கும் இஸ்லாத்திற்கும் உள்ள தொடர்பானது இஸ்லாத்திற்கும் எதேச்சாதிகாரத்திற்கும் இடையேயான தொடர்பாக அடையாளம் செய்யப்படுள்ளது, இது முற்றிலும் தவறான கருத்தாகும் ,"எப்பொழுது ஒரு சமுதாயம் அத்ன்மீது விதிக்கப்பட்டுள்ள சமூகக்கடமையிலிருந்தும் நழுவி விடுமே அப்போது அந்த சமூகம் தண்டிக்கபடும் என்ற இஸ்லாத்தின் அரசு சார் கருத்தை இவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Muhammad Rashid Rida (1865-1935)

இஸ்லாமிய அரசியல் களத்தில் அடுத்து முக்கியத்துவம் பெரும் ஒருவராக ரஷித் ரிழா அமைகின்றார், முஸ்லிம் சமூகத்தின் அறீவீனமே அரசியல் அநாதை நிலைக்கான காரணம் என வாதிடும் ரஷித் ரிழா அதுவே மோசமான அரசியல் சூழலுக்கும் காரணம் என்கின்றார், இஸ்லாம் இரண்டு விடயங்களை தன்வசம் கொண்டுள்ளது ஒன்று ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்தல், தேசத்தின் விடயத்தில் கலந்தாலோசனை செய்தல் என்பனவே அவ்விரண்டுமாகும், ஆனால் எதேச்சாதிகார ஆட்சியாளர்கள் இதனை மறந்ததுமில்லாமல் முன்னையதை ஏற்று பின்னையதை விட்டுவிடும்படி மக்களை ஏவினார்கள். இஸ்லாம் அரசியலுக்குத்தேவையான அடிப்படைகளை நிறுவியது மட்டுமல்லாமல் துணைவிடயங்களில் இஜ்திஹாத் என்னும் வழிமுறையினையும் அறிமுகம் செய்து தந்துள்ளது.ஆனால் அரசியல் தவிர்ந்த ஏனையவிடயங்களில் மேற்கொள்ளப்பட்ட இஜ்திஹாதின் அளவின் சிறு பகுதியேனும் அரசியல் விடய்த்தில் மேற்கொள்ளப்படவில்லை, இதுவே எமது அரசியல் குழறுபடிகளுக்கான் மூலக்காரணமாக அமைகின்றது.


பகுதி-02

19ம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் மேலைத்தேய சிந்தனைகளினால் கவரப்பட்டு எப்படியாவது இஸ்லாமிய அரசியல் ஒழுங்கினுள் மேலைத்தேய அரசியல் அமைப்பை புகுத்தி அதற்கு ஒரு இஸ்லாமிய வடிவத்தைக் கொடுத்துவிடவேண்டும் என்று முயற்சித்தனர்: அது வெற்றியளிக்கவில்லை, 15ம் நூற்றாண்டுகளில் உலகின் பெரிய சாம்ராஜ்யமாக இருந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் 19ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதிகளில் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. உலக முஸ்லிம்களை இணைத்த ஒற்றுமையின் அடையாளமாக இருந்த கலீபா(தலைமைத்துவம்): 1924ல் ஏற்பட்ட உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சியுடன், இல்லாமலாக்கப்பட்டது. இதுவே இஸ்லாமிய சாம்ரஜ்யத்தின் வீழ்ச்சியாகவும் கருதப்படுகின்றது.

இக்காலகட்டத்தில்தான் முஹம்மது அப்துஹு,ரஷீத் ரிழா ஆகியோர் "அல் மனார்" என்னும் அரசியல் மாத இதழொன்றின் மூலம் மக்களை வழிநாடாத்திகொண்டிருந்தனர், இவ்வாறான ஒரு சூழலில் அஹ்மத் பன்னா என்னும் இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் புதல்வனான இமாம் பன்னா அவர்கள் ஒரு திட்டமிட்ட அடிப்படையிலும் இஸ்லாமிய அடிப்படைகளின் அடிப்படையிலும் சமகால உலகின் முதலாவது இஸ்லாமிய இயக்கத்தை நிறுவினார்.இன்றும் இஸ்லாமிய உலகில் அறியப்படும் "இஃவானுல் முஸ்லிமூன்" என்னும் அமைப்பு இஸ்லாமிய அரசியல் இயக்கமாக நிறுவப்பட்டது.

அறியப்படும் "இஃவானுல் முஸ்லிமூன்" அமைப்பின் வளர்ச்சி மிககுறுகிய காலத்தில் மிகவேகமாக இடம்பெற்றது, பலாஸ்தீன ஆக்கிரமிப்புக்கெதிரான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்கும் அரபு உலகில் அறியப்படும் "இஃவானுல் முஸ்லிமூன்" இயக்க்கத்தின் தோற்றப்பாட்டிற்கும் நிறையவே தொடர்புகள் இருக்கின்றன. 1939 அளவில் இமாம் ஹஸனுல் பன்னாவின் தலைமையில் வெளியிடப்பட்ட ரஸாயில் rasa'il (messages or articles)என்ற இதழில் வெளியான Bayn al-Ams wa'l-Yawm (Between Yesterday and Today), ஆக்கம் அதிக தாக்கம் உள்ளதாகவும் இஸ்லாமிய அரசியல் ஒழுங்கின் அவசியம் குறித்ததாகவும், "இஃவானுல் முஸ்லிமூன்" இயக்கத்தின் பணி குறித்துப்பேசுவதாயும் இருந்தது. அதில் இமாம் பன்னா அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.




Tuesday, December 25, 2007

இஸ்லாமிய இயக்க அரசியலில் கவனிக்கப்படவேண்டிய சமகால சிந்தனைகள் (அ.அஸ்மின்)

இஸ்லாமிய அரசியலின் புதிய பணி

21ம் நூற்றாண்டு இஸ்லாத்திற்குறியது என்ற கருத்து எவ்வளவு நிஜமானது என்பதற்கு கட்டியம் கூறுவதுபோலவே குறித்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே (2001-9-11) அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் மேற்கொண்ட நயவஞ்சகத்தனமான தாக்குதல் நடத்தையும் அதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையில் அதன் நேசநாடுகளும் இஸ்லாமிய உலகிற்கு எதிராக மேற்கொண்ட வன்மப்பாய்ச்சலும், ஒஸாமா பின்லேடன் என்னும் இஸ்லாமிய உலகில் அதிகம் அறிமுகமில்லாத, இஸ்லாமிய சிந்தனைமிக்க அறிஞர்வரிசையில் இல்லாத ஒருவரை இஸ்லாத்தின் முதன்மை முகவரியாகக்காட்ட முற்பட்ட முய்ற்சிகளும்: இஸ்லாமிய இயக்கங்களுக்கும், இஸ்லாமியவாதிகளுக்கும் கிடைத்த மிகப்பாரிய வெற்றியும், வாய்ப்பும் என்றே கொள்ள வேண்டியுள்ளது, எனெனில் இஸ்லாத்தினது உண்மையான முகவரி அமெரிக்காவும் அதன் நேச சக்திகளும் சுட்டிக்காட்டிய தீவிரவாதமும், தீவிரவாதிகளுமல்ல.

இத்தகைய நயவஞ்சகமான தாக்குதலைத்தொடர்ந்து, உண்மையான இஸ்லாத்தையும் அதன் முகவரியையும் தேடும் முயற்சிகள் பலதரப்பினரிடமிருந்தும் முனைப்புடன் முடுக்கிவிடப்பட்டுள்ளன, இதுவே இஸ்லாத்திற்கும் இஸ்லாமியவாதிகளுக்கும் கிடைத்த மிகச்சரியான சந்தர்ப்பம், இஸ்லாத்தின் மிகச்சரியான அடையாளத்தையும் அதன் முகவரியையும் உலகிற்கு காட்டும் பொருப்பும் கடமையும் இஸ்லாமிய இயக்கங்களுக்க்கும், அறிஞர்களுக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது, அதற்கான முயற்சிகள் இப்போது பரவலாக மேற்கொள்ள்ப்படுகின்றன. இஸ்லாமியசிந்தனை உலகிற்கு எடுத்துச்சொல்லப்படுவதற்கான மிகச்சரியான தருணம் இதுவே.

"20ம் நூற்றாண்டில் கம்யூனிஸத்தின் செம்படை, ஆயுதப்பலத்தினால் தோற்கடிக்கப்படவில்லை, மேற்கு கையாண்ட அறிவியல், இராஜதந்திர முன்னெடுப்புகளே காரணமாகின: 21ம் நூற்றாண்டில் மிகஜாம்பாவானான தோற்றப்பாட்டுடன், அதி நவீன ஆயுததள்பாடங்களுடன் இஸ்லாமிய உலகுக்கு முன்னால் நிற்கின்ற அமெரிகாவும அதன் நேச நாடுகளும் ஆயுதத்தால் தோற்கடிக்கப்பட முடியும் என எதிர்பார்க்க முடியாது, மாற்றமாக சிந்தனைப்போராட்டமும் இராஜதந்திர யுத்தமுமே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் வெற்றியைப்பெற்றுத்தரும், எனவே இத்தகய ஒரு பாரிய மாற்றத்திற்கு மிக அடிப்படையாக இஸ்லாமிய அரசியல் ஒழுங்கில் மேற்கொள்ளப்படவேண்டிய முக்கியமான ஒரு மாற்றம் யாதெனில்; இஸ்லமிய அரசியலில் மேற்கொள்ளப்படவேண்டிய சிந்தனைப்புரட்சியாகும்,

அறபு தேசியவாதாமாயினும், குழுவாதங்களாயினும் இப்போது அவை எமக்கு உதவப்போவதில்லை, எமது சமூகத்தில் அரசியல் தீவிரவாத கருத்துக்களும் ஆயுதவிரும்பிகளும் இல்லை என்பதற்கில்லை எனவே முதற்கண் நாம் இதுகுறித்து கவனம் செலுத்தவேண்டும் எமது அரசியல் கருத்துப்பறிமாற்றங்கள் எம்மை வலுப்படுத்தும், எமக்கிடையிலும் பிறமதத்தவரிகளிடையேயும் இஸ்லாமிய அரசியல் குறித்த நல்ல பதிவுகளை அவை ஏற்படுத்தும்,
இக்கருத்தை மொரொகேவின் பின்ஸயீத், சிரியாவின் முஹம்மத் சஹாஹ்ரி, துருக்கியின் பத்ஹுல்லாஹ் குல், ஈரானின் மு.கதாமி இந்தோனேசியாவின் நூர் மாஜித் ஆகிய அறிஞர்களும் கொண்டுள்ளனர்.

Islamic Political Ethics: Civil Society, Pluralism, and Conflict
Edited by Sohail H. Hashmi With a foreword by Jack Miles

எனவே இலங்கையின் முஸ்லிம் அரசியலிலும் இத்தகைய ஒரு பரந்தசிந்தனைத்தளம் பின்னணியாக இருப்பது, அதன் தெளிவானதும் இஸ்லாமிய சிந்தனைசார்ந்த செயற்பாட்டிற்கும் உருதுணையாக அமையும். இனப்பிரச்சினை என்கின்ற புற்று நோயினாலும், யுத்தினால் வாழ்க்கை நடாத்தும் அரசியல் வாதிகளினாலும் அழிவை நோக்கிப்போகும் இலங்கை போன்ற ஒரு தேசம், இஸ்லாத்தின் சரியான வடிவத்தை தெரிந்துகொள்தல் என்பது பல வழிகளில் எமக்கு துணைபோகக்கூடியது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம் அரசியலில் இத்தகைய ஒரு பரந்த பார்வை காணப்படவில்லை, என்கின்ற அதேவேளை இனவாதம் என்ற குருட்டு சித்தாந்தம் அதன் அடிப்படையாக்கப்பட்டது என்பதும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இலங்கையின் அரசியல் கலாசாரம் இனத்துவ சிந்தனைகளுடன் இரண்டரக்கலந்து விட்டதாயினும் அது தவறானதும் மோசமான பின்விளைவுகளைக்கொண்டதுமாகும், எனவே இஸ்லாமிய இயக்கத்தின் அரசியல் அடிப்படையானது இனவாததின் மீது ஏற்படுத்தப்படலாகாது. அது மனிதநலன், அபிவிருத்தி, சமாதனம் என்கின்ற உன்னதமான அடிப்படைகளில் நிறுவப்படவேண்டும், இத்தகைய ஒரு (Paradigm Shift) மனப்பாங்கு மாற்றமொன்று அவசரமானதும் அத்தியாவசியமானதுமாகும்.

இஸ்லாமியா அரசியலும்- தாராண்மைவாதமும்

தாராண்மை வாதம் (
Liberalism) மேற்குலகில் அதன் மோசமான பதிவுகளை வெளிப்படுத்ததொடங்கியிருக்கும் சமகாலத்தில் இஸ்லாமிய உலகினுள்ளும் ஆதிக்கம் செலுத்த முயற்சித்துவருகின்றது, குறிப்பாக நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்களிடையே அது ஆதிக்கம் செலுத்திவிடும் அபாயம் நிறையவே இருக்கின்றது. நவீன வழிமுறைகளில் மிகக்குறுகிய சித்தாந்தங்களில் வெளியே வந்து முற்போக்காக எமது செயற்பாடுகளில் நாம் ஈடுபடுதல் என்பது தாராண்மைவாததினை ஏற்றுக்கொண்டு எல்லா தளங்களிலும் நாம் எமது அடையாளத்தை தொலைத்துவிடுவதைக்குறிக்காது. மாற்றமாக எமது சுயம் தொலக்காமலும் அடிப்படைச்சிந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் நிகழாத வண்ணம் எமது செயற்பாடுகளை சமகால உலக் ஒழுங்கின் நிலைமகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நிலையே எம்மிடம் வரவேற்கப்படவேண்டும். இங்கு தாரண்மைவாதத்திற்கும் இஸ்லாமிய சிந்தனைக்கும் இடையிலான பிரிகோடு மிகத்தெளிவாக வரையப்படுதல் வேண்டும்.

சமகால இஸ்லாமிய அறிஞர் வரிசையில் மிகவும் இளையவரான (Tharik Ramadhan) தாரிக் ரமழான் (இமாம் ஹஸன் அல் பன்னாவின் பேரன், சயீத் ரமழானின் புதல்வன்) எழுதிய To Be a European Muslim ஏன்ற நூலில் இதுகுறித்துப்பேசியுள்ளார். பொதுவாக மேற்கிலிருந்து வரும் இஸ்லாமிய அறிஞர்களிடையே இத்தகைய ஒரு எச்சரிக்கையான தன்மை அவசியப்படுவதாய் அவர் உணருகின்றார்
பள்ளிக்கூடங்களில் தாராண்மைவத்ததை மையபடுத்தி மாணவர்களை வளர்த்தெடுப்பதற்கு உள்ள உரிமை, ஒரு மார்க்கத்தின்பால் அல்லது சிந்தனையின்பால நாட்டம் கொண்ட ஒருவர் தனது குழ்ந்தைக்கும் அதன் அடிப்படைகளை வழங்க நினைப்பதும் அதற்கு முயற்சிப்பதும் ஒன்றும் குழ்ந்தைகளின் உரிமைகளை மீறும் செயலாகாது, எனெனில் தாராண்மைவாதத்தை வலுக்கட்டாயமாக சிறுவர்களிடம் பதிக்கும் முயற்சியும்
ஒருவிதத்தில் உரிமை மீறலே அதாவது அவர்களது மார்க்கம் குறித்த அடிப்படைகளை அவர்கள் கற்றுக்கொள்ளும் உரிமையினை மீறுவதாகும். எனவே இங்கு தாராண்மைவாதம் என்பது நாம் எமது குழந்தைகளுக்கு மார்க்கம் பற்றிய அறிவை வளங்காமலிருப்பதாகும், ஆனால் முஸ்லிம்கள் இதற்கு மாற்றமானவர்கள்: குழந்தைக்கு தேவையான எல்லா கற்றல் வசதிகள் வழங்கப்படுவதுபோலவே அவர்களுக்கும் மார்ர்க்கத்தின் அடிப்படைகளும் சொல்லித்தரப்படும். எனவே தாரண்மைவாதம் எமக்குள் உள்வாங்கப்படமாட்டாது.

இதுவே எமது அரசியலிலும், எமது எல்லா நடத்தைகளிலும் தாக்கம் செலுத்தவேண்டும்.

எல்லாத்தரப்பினர்க்கும் தகுந்த இடம் சம காலத்தில்
வழங்கப்படுதல் வேண்டும்

இஸ்லாமிய அரசியல் என்பது அதன் ஆரம்பம் தொட்டே எல்லா தரப்பினர்க்கும் உரிய வாய்ப்பளிக்கப்படவேண்டிய பகுதியாகும். இங்கு எல்லாத்தரப்பினர் என்று நான் குறிப்பிடுவது ஆண்களைப்போலவே பெண்களுக்கும் வாலிபர்களுக்கும் வாய்ப்பளிக்கப்படவேண்டும், அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில் எமது முயற்சிகளில் அவர்கள் எப்படி பங்கேற்கமுடியாது போகுமே அவ்வாறே எமது வரலாற்றிலும் அவர்களால் பங்கேற்க முடியாதூ போகும். சமகால இஸ்லாமிய உலகில் வாலிபர்கள் மற்றும் பெண்களின் கனிசமான பங்களிப்பு காணப்படுகின்றது, எம் சமூகத்தின் இயல்பான குறுகிய சிந்தனைப்போக்கில் பெண்களுக்கும் வாலிபர்களுக்குமான இடம் நீண்டகாலமாகவே சரிவர வழங்கப்பட்டிருக்கவில்லை, ஆனால் எமது அரசியல் முயற்சியிலும் இதுவே மீட்டப்படுமாயின் அது எம்மை பல விதங்களில் பாதிக்கும். அதுமட்டுமன்றி அவர்களது ஈடுபாடு அத்தியாவசியப்படுகின்ற சூழலில் எம்மிடம் தகுந்த அனுபவமும் ஆற்றலும் உள்ள மனித வளப்பற்றாக்குறை நிறையவே தோன்றியிருக்கும். எனவே இது எம்மிடம் மீண்டும் மீண்டும் மீட்டப்படாதிருக்க இப்போது முதல் எல்லாத்தரப்பினர்க்கும் உரிய இடம் வழங்கப்படுதல் வேண்டும்